சித்தாந்தன்
-----------------------------------
எம்மிடை விரியும் வெளியில்
ஊதுபத்தியின் வாசனை கமழ்வதாய் சொல்கிறாய்
புறக்கணிக்கப்பட்ட ஒரு கவிதைக்கு
இசை மதுவூற்றி கிண்ணங்களை ததும்ப வைக்கிறாய்
ததும்பி வழிந்த மதுவில்
என் கனவுகள் குமிழியிட்டுடைவதாய்
நொருங்கிச் சிதறும் சொற்களால் பாடுகிறாய்
இன்றேன் எம் புன்னகையில் ஈரம் வடிந்திற்று
காலாற நிழலற்ற பெருந்தெருவில்
கானலில் ஈர்ப்புற்று அலையும்
நாய்களின் இளைப்பின் அதிர்வு
சாகடிக்கப்பட்ட கணங்களாய் நீள்கிறது.
இனி இரவுகள் தொங்கும் கயிற்றில்
விழிப்பின் நிறங்களை உரித்தெடுத்தபடி
நீ செல்லப் போகிறாய்
எத்தனை ஆந்தைகள் அலறுகின்றன என்னுள்
மழையற்ற நெடுங்காலமிது
பாழாக்கப்பட்ட கட்டடங்களின் மேலிருந்து
சிறகுலர்த்துகிறது கொண்டைக்குருவி ஒற்றையாய்
இடிபாடுகளுக்குள் கேட்கும் குரல்
வெளவால்களை துரத்திச் செல்கிறது
அவற்றின் பறப்பெல்லைவரை.
நீ காலியான மதுக்குவளைகளை முகர்கிறாய்
மீதமிருக்கும் போதையையும்
அவற்றின் நெடியால் நிறைக்கிறாய்
பின்னும்
விழிப்பின் நிறங்களை உரித்தெடுத்தபடி
எனது காலத்தை நிர்வாணப்படுத்துகிறாய்
எச்சிலாய் வழிகிறது மிஞ்சியுள்ள சொற்களும்.
நீ சொல்கிறாய்
எம்மிடை விரியும் வெளியில்
ஊதுபத்தியின் வாசனை கமழ்வதாய்
வாழ்தலின் இழையறுத்து வலைபின்னுகிறது காலம்
கத்திக்கும் வாளுக்குமான பேதந்தான் எமக்கு
நீ செல்லப்போகிறாய்
காரணமற்ற குரோதத்தின் பழியுணர்ச்சியுடனும்
நான் பருகமறுத்த மதுவின் போதையுடனும்.
உனக்கு வழிவிடப்போகும் கடலை
விசமாக்கிற்று உனது பார்வை.
மீன்கள் செத்து மிதக்கின்றன
கடல் நாறி மணக்கிறது
இன்னும் நீ சொல்கிறாய்
எம்மிடை விரியும் வெளியில்
ஊதுபத்தியின் வாசனை கமழ்வதாய்.
27-05-2007 இரவு- 11.51
------------------------------------
Related Posts:
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அஞ்சலி
சிறுகதைகள்
விமர்சனங்கள்
தமருகம்
இணைப்புக்கள்
- ஃபஹீமாஜஹான்
- அ.முத்துலிங்கம்
- அகேனம்
- அஜந்தகுமார்
- அருண்மொழிவர்மன்
- எஸ்.ராமகிருஷ்ணன்
- எஸ்போஸ்
- கடற்கரய்
- கருணாகரன்
- கலாப்ப்ரியா
- குட்டி ரேவதி
- சஜிதரன்
- சுதேசம்
- ஜமாலன்
- ஜெயமோகன்
- டிசே தமிழன்
- தானா விஷ்ணு
- தீபம்
- துவாரகன்
- தேவ அபிரா
- நாகார்ஜூனா
- நாஞ்சில்நாடன்
- பெட்டை
- முரண்வெளி
- மெலிஞ்சி முத்தன்
- லீனா மணிமேகலை
- வண்ணதாசன்
- வண்ணநிலவன்
- ஷோபாசக்தி
- ஸ்மைல் வித்தியா
பகுதிகள்
- அறிமுகவுரை (1)
- எதிர்வினை (2)
- கட்டுரை (2)
- கடிதம் (1)
- கவிதைகள் (81)
- குறும்படம் (1)
- சஞ்சிகை அறிமுகம் (2)
- சிறுகதை (4)
- சினிமா (2)
- நினைவுக் குறிப்பு (1)
- நுால் அறிமுகம் (2)
- நேர்காணல்கள் (1)
- நேரும் எதிரும் (2)
- மாயத்திரை (3)
- முன்னுரைகள் (2)
- மொழியாக்கக் கவிதைகள் (2)
- விமர்சனங்கள் (3)
வலைப்பதிவுக் காப்பகம்
-
►
2011
(19)
- ► செப்டம்பர் (2)
-
►
2010
(22)
- ► செப்டம்பர் (1)
-
►
2009
(12)
- ► செப்டம்பர் (3)
-
▼
2008
(29)
- ► செப்டம்பர் (2)
0 comments:
கருத்துரையிடுக