சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

ஞானம் கலைந்த இரவு

14 செப்டம்பர், 2008

சித்தாந்தன்
--------------------------------------------------
யசோதரையுடனான கடைசியிரவில்
தியானத்தின் ஆழ்நிலையில்
ஊறிக்கிடந்த புத்தரை
அரூப நடன தேவதைகள் இழுத்துச்சென்றன
சூழவும் விருட்சங்கள் வளர்ந்திருந்த
இன்பச் சோலையுள்
நகக்கணுக்கள் வழியே நுழைந்த
மோகக்கனிகளை உண்டு அவர் பசியாறினார்
பிறகு
தேவதைகள் யசோதரையின் படுக்கையில்
அவரைக் கடாசி வீசிவிட்டுப் போயின

காலை விடிந்தும் ஞான உறக்கத்திலிருந்து
கலையாதவரை
தனது தலை மயிர்களினால் மூடி
மார்போடணைத்து முத்தமிட்டாள் யசோதரை
புத்தரின் ஞானம் சிதறுண்டு
யசோதரையின் கன்னங்களில் முத்தமிட்ட
அவரின் ஞான வெளியில்
தேவதைகளின் அந்தரங்கங்கள் பூத்து விரிந்தன
அவர் படுக்கையிலிருந்து இறங்கி
தேவதைகளின் உலகை
தேடி அலையத் தொடங்கினார்
----------------------------------

சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்