எனது இறந்தகால அல்பம்
...........................................................................
சித்தாந்தன்
உங்களிடமிருந்து என்னால் எதையும் மறைக்க முடியாது. ஒரு பிணத்தை எப்படி மறைத்து வைக்க முடியும்? என் அல்பம் முழுமையும் பிணங்கள்தான் நிறைந்திருக்கின்றன. இரவுகளால் வஞ்சிக்கப்பட்டவர்களின் தெருக்களில் தொலைந்து போனவர்களின் அடையாள அட்டைகளில் முகம் மாறிப்போனவர்களின் அல்பம் என்னுடையது. எனது அல்பத்தை தெருக்களில் விரித்து வைத்திருக்கிறேன். யாருமே ஏறெடுத்துப்பார்ப்பதில்லை. எல்லோருமே இறந்த காலத்தின் பிணங்கள்தான். பிணங்களின் அல்பங்களை பிணங்கள் பார்ப்பதுமில்லை.அல்பங்களின் வர்ணங்களைப்பற்றி வளர்ந்து வரும் கதைகளை வாசித்துக் கொண்டிருந்த ஆதிக் குரங்கிடம் நான் கேட்டேன் வர்ணங்களின் கதைகளை
ஆதிக்குரங்கு சொன்ன அல்பங்களின் கதை
ஆதியில் அல்பங்களிருந்தன. முகத்திரையிடப்படாத அல்பங்கள விலங்குகளின் அல்பங்கள் ஒன்றும் மனிதர்களின் அல்பங்களிலிருந்து மாறுபட்டவையல்ல. விலங்குகள் மனிதர்களிடமிருந்து அந்நியப்பட்ட நாட்களில் அல்பங்களை ஆக்கத் தொடங்கின. விலங்குகளில் முதலாவது அல்பம் என்னுடையது. நான் எனது அல்பத்தின் முதலாவது படத்தை குகைச்சுவரில் வரைந்தேன். இலைகளாலும் தழைகளாலும் அதற்கு வர்ணங்கள் பூசினேன்.இப்படித்தான் தொடங்கியது வர்ணங்களின் கதை.மனிதர்கள் காடுகளிலிருந்து வெளியேறத் தொடங்கிய பின்னர் எனது முகத்தின் சாயலை அவர்கள் இழக்காத போதும் நிமிர்ந்து நடக்கத்தொடங்கினர். கத்திகளையும் கூரிய கற்களையும் அவர்கள் கைவிடவில்லை. முன்னர் எம்மை வேட்டையாட அவற்றைப் பாவித்தவர்களின் பழக்க தோசம் மாறாததால் தங்களிடையே சண்டையிடத் தொடங்கினர். விலங்குகளின் அல்பங்களை விடவும் மனிதர்களின் அல்பங்களில் இரத்தக் காயங்கள் அதிகம்.எனது அல்பத்தில் நதிகள் வற்றி விட்டன மலைகள் கரையத் தொடங்கிவிட்டன காடுகளின் நிலக்காட்சிகளில் விலங்குகள் பற்றிய கதைகளை வெறும் என்புகளாக மனிதர்கள் வாசிக்கின்றார்கள்.காடுகளுக்குள் யுத்தம் வந்துவிட்டது நிலங்களைப் போல காடுகளையும் யுத்த டாங்கிகள் உழுகின்றன.எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கின்றன் காடுகள் எரிகின்றன. பசுமை போர்த்திய மரங்களில் போர் உறைந்துபோயிற்று. மிருகங்களைப் போர் துரத்துகின்றது. காடுகள் அழகையிழந்து விட்டன. ஆதிக்குரங்கு தன் அல்பங்களில் வற்றிப்போன நதிகளை தேடிக் கொண்டிருக்கிறது.
Related Posts:
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அஞ்சலி
சிறுகதைகள்
விமர்சனங்கள்
தமருகம்
இணைப்புக்கள்
- ஃபஹீமாஜஹான்
- அ.முத்துலிங்கம்
- அகேனம்
- அஜந்தகுமார்
- அருண்மொழிவர்மன்
- எஸ்.ராமகிருஷ்ணன்
- எஸ்போஸ்
- கடற்கரய்
- கருணாகரன்
- கலாப்ப்ரியா
- குட்டி ரேவதி
- சஜிதரன்
- சுதேசம்
- ஜமாலன்
- ஜெயமோகன்
- டிசே தமிழன்
- தானா விஷ்ணு
- தீபம்
- துவாரகன்
- தேவ அபிரா
- நாகார்ஜூனா
- நாஞ்சில்நாடன்
- பெட்டை
- முரண்வெளி
- மெலிஞ்சி முத்தன்
- லீனா மணிமேகலை
- வண்ணதாசன்
- வண்ணநிலவன்
- ஷோபாசக்தி
- ஸ்மைல் வித்தியா
பகுதிகள்
- அறிமுகவுரை (1)
- எதிர்வினை (2)
- கட்டுரை (2)
- கடிதம் (1)
- கவிதைகள் (81)
- குறும்படம் (1)
- சஞ்சிகை அறிமுகம் (2)
- சிறுகதை (4)
- சினிமா (2)
- நினைவுக் குறிப்பு (1)
- நுால் அறிமுகம் (2)
- நேர்காணல்கள் (1)
- நேரும் எதிரும் (2)
- மாயத்திரை (3)
- முன்னுரைகள் (2)
- மொழியாக்கக் கவிதைகள் (2)
- விமர்சனங்கள் (3)
0 comments:
கருத்துரையிடுக