சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

கதை வியாபாரிகளின் நகரம்

23 செப்டம்பர், 2009

சித்தாந்தன்
.......................................................
உடலெல்லாம் பூசப்பட்ட மாய நறுமணப்பொடிகள்
நாறத்தொடங்கிய பின்
எந்தக் கூச்சமோ அருவருப்போவின்றி
கதைகள் வாசிக்கப்படுகின்றன தெருக்களில்

கதைகளில் உறங்குபவனின் தேகத்தில்
அச்சிடப்பட்டிருக்கின்றன எண்ணற்ற கதைகள்
உடல் பொசியும் மணத்துடன்
அலையும் கதைகளின் வியாபாரி
“கடனில்லை” என்ற அட்டையைக்
தூக்கிக் கொண்டு திரிகின்றான்

வாசிக்கப்படாத கதைகளுக்காய்
வாசித்தவற்றை மறந்துபோன மனிதர்கள்
மிதக்கும் ஓரிரு உரையாடல்களையும்
கதையென நம்பிக் கவ்வித் தின்கிறார்கள்

கணம் பிந்தி வந்த புதிய வியாபாரி
கதைகளை அவிழ்க்கிறான்
முண்டியடிக்கும் மனிதர்களிடையே
தன்குறியை உயர்திக் காட்டுகின்றான்

ஊனமும் சிதழும் வழியப் புழுக்கள் நெளியும்
அவன் குறி வழி பெருகும் கதைகளை
அவசர அவசரமாக் அள்ளிக் கொண்டு
கலைகின்றனர் மனிதர்

மேலும் ஒருவன் கதைகளைக் கூவி விற்றபடி
தெருவில் வருகின்றான்

சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்