சித்தாந்தான்
........................................................................
திறந்து வைத்திருக்கிறேன் என் தெருவை
நீயோ புறக்கணித்துத் திரும்புகின்றாய்
யன்னல் கண்ணாடிகள் உடைந்து
சில்லுகளாய்ச் சிதறியிருக்கும் வீட்டின்
உட்புறமாய்
இன்னும் மீதமாயிருக்கிறது அந்திமப் புன்னகை
எதற்காக
என் கைகளை விடுவித்தாய்
புழுக்களாய் நெளிகின்றன உன் சொற்கள்
தேகத்தில்
மனந்திறக்காத வீட்டின் வரைபடத்தில்
தொங்கும் தூக்குக் கயிற்றில்
சுருக்கிடப்பட்டிருப்பது
நீயுமல்ல நானுமல்ல நம் நினைவுகள்
பருதி தாண்டாத சில பொழுதுகளை
சுமந்திருந்தோம் தோள்களில்
முடிவற்ற பேருந்துப் பிரயாணத்தில்
யன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்த
என்முகத்தல் அறைந்த காற்று
பரிசுத்தமற்ற மனத்தின் இழைகள்
அறுந்து போனதாய்ச் சொல்லிச் சென்றது
நீ போய் யாரிடமாவது சொல்லப்போவதில்லை
கருணையின் கடலளவு வலியை
நான் காலியாக இருக்கும் நாற்காலியைப் பார்த்துப்
புன்னகை செய்கிறேன்
என் தெருவில் நடந்து செல்கிறது
யாரோ வளர்க்கும் நாய்
நன்றி-எதுவரை (பெப்- மார்ச் 2010)
Related Posts:
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அஞ்சலி
சிறுகதைகள்
விமர்சனங்கள்
தமருகம்
இணைப்புக்கள்
- ஃபஹீமாஜஹான்
- அ.முத்துலிங்கம்
- அகேனம்
- அஜந்தகுமார்
- அருண்மொழிவர்மன்
- எஸ்.ராமகிருஷ்ணன்
- எஸ்போஸ்
- கடற்கரய்
- கருணாகரன்
- கலாப்ப்ரியா
- குட்டி ரேவதி
- சஜிதரன்
- சுதேசம்
- ஜமாலன்
- ஜெயமோகன்
- டிசே தமிழன்
- தானா விஷ்ணு
- தீபம்
- துவாரகன்
- தேவ அபிரா
- நாகார்ஜூனா
- நாஞ்சில்நாடன்
- பெட்டை
- முரண்வெளி
- மெலிஞ்சி முத்தன்
- லீனா மணிமேகலை
- வண்ணதாசன்
- வண்ணநிலவன்
- ஷோபாசக்தி
- ஸ்மைல் வித்தியா
பகுதிகள்
- அறிமுகவுரை (1)
- எதிர்வினை (2)
- கட்டுரை (2)
- கடிதம் (1)
- கவிதைகள் (81)
- குறும்படம் (1)
- சஞ்சிகை அறிமுகம் (2)
- சிறுகதை (4)
- சினிமா (2)
- நினைவுக் குறிப்பு (1)
- நுால் அறிமுகம் (2)
- நேர்காணல்கள் (1)
- நேரும் எதிரும் (2)
- மாயத்திரை (3)
- முன்னுரைகள் (2)
- மொழியாக்கக் கவிதைகள் (2)
- விமர்சனங்கள் (3)
0 comments:
கருத்துரையிடுக