சித்தாந்தன்
என்னுடலின் நெளிவுகளுக்கிடையில்
அவிழ்கிறது ஆடை
புலன்களைத் திறந்தவனின் நிர்வாணத்தை
காற்றின் கண்கள் மேய்கின்றன
கறுத்த இலைகளுடன் சடைத்திருக்கும்
பெரு மரத்தின் கீழ்
விக்கிரகமாய் இறுகியுள்ள கடவுளின் சிலை மேல்
சிறுநீர் கழிக்கும் நாய்
புனிதத்தின் அதியுன்னத இசையை வேட்டையாடுகிறது
பாதையெல்லாம்
தங்கள் முகங்களின் நிர்வாணத்தை
முகமூடிகளால் மறைத்திருக்கும் மனிதரின்
வார்த்தைகளின் அசிங்கம்
உரோமக் கால்களில் எச்சிலாய் வழிகிறது
எதையும் ஜீரணிக்க முடியாது
வீடு திரும்பும் என்னிடமிருந்து
ஆடையை உருவிப் போகிறது எதிர் வீட்டு நாய்
நான் நாயாகவும்
நாய் நானாகவுமாக இருக்கும்
மிகப்பிந்திய நிமிடங்களில்
நாய்களின் அதியுன்னத இசையை
என் புலன்களால் வேட்டையாடத் தொடங்கினேன்
நாய்களைப் போலவே அலைகிறது
என் அதியுன்னத இசை
00
Related Posts:
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அஞ்சலி
சிறுகதைகள்
விமர்சனங்கள்
தமருகம்
இணைப்புக்கள்
- ஃபஹீமாஜஹான்
- அ.முத்துலிங்கம்
- அகேனம்
- அஜந்தகுமார்
- அருண்மொழிவர்மன்
- எஸ்.ராமகிருஷ்ணன்
- எஸ்போஸ்
- கடற்கரய்
- கருணாகரன்
- கலாப்ப்ரியா
- குட்டி ரேவதி
- சஜிதரன்
- சுதேசம்
- ஜமாலன்
- ஜெயமோகன்
- டிசே தமிழன்
- தானா விஷ்ணு
- தீபம்
- துவாரகன்
- தேவ அபிரா
- நாகார்ஜூனா
- நாஞ்சில்நாடன்
- பெட்டை
- முரண்வெளி
- மெலிஞ்சி முத்தன்
- லீனா மணிமேகலை
- வண்ணதாசன்
- வண்ணநிலவன்
- ஷோபாசக்தி
- ஸ்மைல் வித்தியா
பகுதிகள்
- அறிமுகவுரை (1)
- எதிர்வினை (2)
- கட்டுரை (2)
- கடிதம் (1)
- கவிதைகள் (81)
- குறும்படம் (1)
- சஞ்சிகை அறிமுகம் (2)
- சிறுகதை (4)
- சினிமா (2)
- நினைவுக் குறிப்பு (1)
- நுால் அறிமுகம் (2)
- நேர்காணல்கள் (1)
- நேரும் எதிரும் (2)
- மாயத்திரை (3)
- முன்னுரைகள் (2)
- மொழியாக்கக் கவிதைகள் (2)
- விமர்சனங்கள் (3)
0 comments:
கருத்துரையிடுக