சித்தாந்தன்
பூதங்களை வரைபவனின் கனவுகளுக்குள்
நுழைந்துகொண்டன தேவதைகள்
கடற்கரையில் மணல்வீடு கட்டிய அவன்
தேவதைகளுக்கான அறைகளை
வர்ணமடித்துச் செப்பனிட்டான்
ஒவ்வொருவருக்கும் பிரத்தியேகமாக
வடிவமைக்கப்பட்ட குளியலறைகளுக்குள்ளும்
படுக்கையறைகளுக்குள்ளும்
உள்ளாடைகளைக் காயவிடும்
கொடிகளைக் கட்டினான்
அந்திமத்தில் வந்திறங்கிய தேவதைகள்
வானளவு அறைகளை அவனிடம் கேட்டன
அவன் கைகளை அகட்டி
பூதங்களைப் போல் விரிந்த வானங்களை
வரைந்து காட்டினான்
திருப்தியுறாத தேவதைகள்
அவனை மலடாகும்படி சாபமிட்டன
அவனின் மணல் வீட்டை
இழுத்துச் சென்றுவிட்டது அலை
சபிக்கப்பட்ட அவனின் குறியினுள்
இரைந்துகொண்டிருக்கிறது கடல்
அந்திமத்தின் வர்ணங்களில்
கரைந்துருகுகிறது வானம்
நன்றி- உயிர் நிழல்
Related Posts:
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அஞ்சலி
சிறுகதைகள்
விமர்சனங்கள்
தமருகம்
இணைப்புக்கள்
- ஃபஹீமாஜஹான்
- அ.முத்துலிங்கம்
- அகேனம்
- அஜந்தகுமார்
- அருண்மொழிவர்மன்
- எஸ்.ராமகிருஷ்ணன்
- எஸ்போஸ்
- கடற்கரய்
- கருணாகரன்
- கலாப்ப்ரியா
- குட்டி ரேவதி
- சஜிதரன்
- சுதேசம்
- ஜமாலன்
- ஜெயமோகன்
- டிசே தமிழன்
- தானா விஷ்ணு
- தீபம்
- துவாரகன்
- தேவ அபிரா
- நாகார்ஜூனா
- நாஞ்சில்நாடன்
- பெட்டை
- முரண்வெளி
- மெலிஞ்சி முத்தன்
- லீனா மணிமேகலை
- வண்ணதாசன்
- வண்ணநிலவன்
- ஷோபாசக்தி
- ஸ்மைல் வித்தியா
பகுதிகள்
- அறிமுகவுரை (1)
- எதிர்வினை (2)
- கட்டுரை (2)
- கடிதம் (1)
- கவிதைகள் (81)
- குறும்படம் (1)
- சஞ்சிகை அறிமுகம் (2)
- சிறுகதை (4)
- சினிமா (2)
- நினைவுக் குறிப்பு (1)
- நுால் அறிமுகம் (2)
- நேர்காணல்கள் (1)
- நேரும் எதிரும் (2)
- மாயத்திரை (3)
- முன்னுரைகள் (2)
- மொழியாக்கக் கவிதைகள் (2)
- விமர்சனங்கள் (3)
0 comments:
கருத்துரையிடுக