சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

அம்ருதா வரைந்த சிங்கங்களின் புனைவுருக்கள்

13 ஜூலை, 2010


சித்தாந்தன்

நீளமான இரவின் மையத்தில் தலை நீட்டிப்
படுத்திருக்கும் சிங்கங்களைத்
தன் பாலியப் பருவத்திலிருந்து
அம்ருதா வரைந்திருக்கிறாள்

அம்ருதா தன் சிங்கங்களிற்கு
குறிகளை வரைவதில்லை

முன்பனிக் காலத்தில் அவள் வரைந்த
எண்ணற்ற சிங்கங்களும்
புணர்ச்சியைக் கண்டு முகம் சுழிப்பவை

அவளின் நூறாவது சிங்கம்
குறியை வரையக் கேட்டு அடம்பிடித்தபோது
இருநூறாவது தடவை வரைவதற்கிடையில்
குறியை வரையும் நுட்பங்களைக்
கற்று முடிப்பதாகக் கூறினாள்

அம்ருதாவின் வனத்தில்
சிங்கங்களின் கர்ச்சனைகளில்லை
வனத்தின் புதிரும் அடர்வதில்லை

வனங்களைப் புறக்கணிக்கும் சிங்கங்கள்
அவளுக்கு நண்பர்களாயுள்ளன

தன் சூட்சும புத்தியால்
சிங்கங்களின் நகங்களை வெட்டிவிடுகிறாள்
பற்களை பிடுங்கிவிடுகிறாள்

அவள் வனங்களை விட்டு வெளியேறிய
சிங்கங்களின் இராணியாகத் தன்னைப்
பிரகடனப்படுத்தியபடியிருக்கிறாள்

விழிமுட்டும் தூக்கத்தை
அநேகமும் தூங்கியே கழிக்குமவள்
தான் சிங்கங்களை வரைந்த வரைவேட்டை
தலையணைக்கடியில் பத்திரப்படுத்தியிருக்கிறாள்

அம்ருதாவின்
மிருதுவான மூச்சொலியில் தம் பொழுதுகளைத்
தூங்கிக் கழிக்கின்றன சிங்கங்கள்

சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்