சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

ஓளிமங்கும் வட்டங்கள்

10 ஆகஸ்ட், 2010

சித்தாந்தன்

சலனம் முற்றிய மனிதமுகங்கள்
இன்றைய நாட்களை நிறைத்திருக்கின்றன
எப்போதும்
கனவுகளின் இழைகளில் தொங்கும்
சுடரின் திரியை
இழுத்துச் சென்று கொத்துகிறது
ஆட்காட்டிப் பறவை

இரவைப் புணர்ந்த குளிரை
கடித்துக் குதறுகின்றன நாய்கள்

வேண்டாத உரையாடல்களின் உட்புறமாய்
சாவைத் தாங்கிச் சலிப்புற்றவர்களின்
முகங்களின் பின்
ஒளிமங்கும் வட்டங்கள் சூழல்கின்றன

எல்லாவற்றையும் புதைத்தவனின்
பெருத்த வயிறு விஷமூறி வெடித்து
வானமெங்கும் பரவியிருக்கிறது விஷக் காற்று

இரவுகளிலிருந்து அவசர அவசரமாகத்
திரும்பும் மனிதர்கள்
உரசி வீசிய தீக்குச்சிகளிருந்து
புகை கருகி எழுகிறது
உக்கிய சரிரங்களின் மணம்

நினைவுகளைத் திருகி
எறிய முடியாதவனின் குரலில் மிதக்கின்றன
எண்ணற்ற முகங்கள்

எங்கோ
யாருடையதோ அடிவயிற்றில்
பற்றியெரிகிறது நெருப்பு

சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்