சித்தாந்தன்
சலனம் முற்றிய மனிதமுகங்கள்
இன்றைய நாட்களை நிறைத்திருக்கின்றன
எப்போதும்
கனவுகளின் இழைகளில் தொங்கும்
சுடரின் திரியை
இழுத்துச் சென்று கொத்துகிறது
ஆட்காட்டிப் பறவை
இரவைப் புணர்ந்த குளிரை
கடித்துக் குதறுகின்றன நாய்கள்
வேண்டாத உரையாடல்களின் உட்புறமாய்
சாவைத் தாங்கிச் சலிப்புற்றவர்களின்
முகங்களின் பின்
ஒளிமங்கும் வட்டங்கள் சூழல்கின்றன
எல்லாவற்றையும் புதைத்தவனின்
பெருத்த வயிறு விஷமூறி வெடித்து
வானமெங்கும் பரவியிருக்கிறது விஷக் காற்று
இரவுகளிலிருந்து அவசர அவசரமாகத்
திரும்பும் மனிதர்கள்
உரசி வீசிய தீக்குச்சிகளிருந்து
புகை கருகி எழுகிறது
உக்கிய சரிரங்களின் மணம்
நினைவுகளைத் திருகி
எறிய முடியாதவனின் குரலில் மிதக்கின்றன
எண்ணற்ற முகங்கள்
எங்கோ
யாருடையதோ அடிவயிற்றில்
பற்றியெரிகிறது நெருப்பு
Related Posts:
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அஞ்சலி
சிறுகதைகள்
விமர்சனங்கள்
தமருகம்
இணைப்புக்கள்
- ஃபஹீமாஜஹான்
- அ.முத்துலிங்கம்
- அகேனம்
- அஜந்தகுமார்
- அருண்மொழிவர்மன்
- எஸ்.ராமகிருஷ்ணன்
- எஸ்போஸ்
- கடற்கரய்
- கருணாகரன்
- கலாப்ப்ரியா
- குட்டி ரேவதி
- சஜிதரன்
- சுதேசம்
- ஜமாலன்
- ஜெயமோகன்
- டிசே தமிழன்
- தானா விஷ்ணு
- தீபம்
- துவாரகன்
- தேவ அபிரா
- நாகார்ஜூனா
- நாஞ்சில்நாடன்
- பெட்டை
- முரண்வெளி
- மெலிஞ்சி முத்தன்
- லீனா மணிமேகலை
- வண்ணதாசன்
- வண்ணநிலவன்
- ஷோபாசக்தி
- ஸ்மைல் வித்தியா
பகுதிகள்
- அறிமுகவுரை (1)
- எதிர்வினை (2)
- கட்டுரை (2)
- கடிதம் (1)
- கவிதைகள் (81)
- குறும்படம் (1)
- சஞ்சிகை அறிமுகம் (2)
- சிறுகதை (4)
- சினிமா (2)
- நினைவுக் குறிப்பு (1)
- நுால் அறிமுகம் (2)
- நேர்காணல்கள் (1)
- நேரும் எதிரும் (2)
- மாயத்திரை (3)
- முன்னுரைகள் (2)
- மொழியாக்கக் கவிதைகள் (2)
- விமர்சனங்கள் (2)
0 comments:
கருத்துரையிடுக