சித்தாந்தன்
எண்ணற்ற கால்கள் முளைத்திருக்கின்றன
இந்தச் சுடரிற்கு
ஈரம் வடியும் காற்று உறைந்து பனிக்கட்டியாகியிருக்கிறது
விரைவாய்ப் பறக்கின்றன தொலைவுப் பறவைகள்
நட்பின் கதைகளைப் புறக்கணிப்பவன்
அணிந்திருக்கிறான்
பாதாளச் சிதைவின் முகத்தை
நீ பேசு
முடிச்சுக்களிடப்பட்ட அகாலக் கயிறு
யாரிடமும் இல்லை
எனினும் அவ்வாறு கருதவேண்டியிருக்கிறது
நீ சனங்களைத் தூற்றுகிறாய்
மரணம் முற்றுகையிட்ட வெளியிலிருந்து
தப்பித்தவர்களை வெறுக்கின்றாய்
மேய்ப்பனின் திருநாமம் பூண்ட நீ
சாகசக்காரரின் சதுரங்க ஆட்டத்தின் புதிரை
அவிழ்க்கத் தயங்குகிறாய்
நீயே சொல்
மந்தைகளாய் ஆக்கப்பட்ட சனங்களால்
என்னதான் செய்ய முடியும்
வனாந்தரமெங்கும் நிறைந்துபோயுள்ளது
யுகம் யுகமாய் எழுப்பிய அழுகுரல்
நீ உணரவில்லையா
காலம் சிதைந்து கல்லாயிற்று
கட்டியெழுப்பப்பட்ட மணற்கோபுரம் உடைந்து
பறவைகளையும் மூடிற்று
தீ சூழும் வெறும் வெளியில்
ஒரு குழந்தையின் நொருங்கிய குரல்
பறவைகளையும் துக்கிக்கச் செய்தது
யன்னலினூடாய் யுத்தத்தின் சாகசங்களை
படித்துக் கொண்டிருக்கும் உன்னிடம்
அதன் கோரத்தையும் அவலத்தையும்
ஜீரணிக்க முடிவதில்லை
விசுவாசத்தின் கண்ணாடியில் உன் புன்னகை
சுடரிழந்து தொங்குகிறது
யுத்தச் செய்திகள் உலர்ந்த பத்திரிகைகளில்
நீ தேடிக்கொண்டிருக்கிறாய் சாவுகளை
நீ கொண்டாடும் நிலத்தின் பாளப் பிளவுகள்
காயங்களைச் சேமித்து வைத்திருக்கின்றன
நீ நம்பித்தானாக வேண்டும்
வானத்தைச் தூக்கிச் சென்றவர்களே
அதைப் போட்டுடைத்தார்கள் என்பதையும்
பறவைகள் அந்தரித்தபடியே திரிகின்றன
உன் யன்னலை மூடும் இரவை விரட்ட
உன் ஒற்றை மெழுகுதிரியாலாகாது
உன் இருதயத்தின் இருளையும் கூட
Related Posts:
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அஞ்சலி
சிறுகதைகள்
விமர்சனங்கள்
தமருகம்
இணைப்புக்கள்
- ஃபஹீமாஜஹான்
- அ.முத்துலிங்கம்
- அகேனம்
- அஜந்தகுமார்
- அருண்மொழிவர்மன்
- எஸ்.ராமகிருஷ்ணன்
- எஸ்போஸ்
- கடற்கரய்
- கருணாகரன்
- கலாப்ப்ரியா
- குட்டி ரேவதி
- சஜிதரன்
- சுதேசம்
- ஜமாலன்
- ஜெயமோகன்
- டிசே தமிழன்
- தானா விஷ்ணு
- தீபம்
- துவாரகன்
- தேவ அபிரா
- நாகார்ஜூனா
- நாஞ்சில்நாடன்
- பெட்டை
- முரண்வெளி
- மெலிஞ்சி முத்தன்
- லீனா மணிமேகலை
- வண்ணதாசன்
- வண்ணநிலவன்
- ஷோபாசக்தி
- ஸ்மைல் வித்தியா
பகுதிகள்
- அறிமுகவுரை (1)
- எதிர்வினை (2)
- கட்டுரை (2)
- கடிதம் (1)
- கவிதைகள் (81)
- குறும்படம் (1)
- சஞ்சிகை அறிமுகம் (2)
- சிறுகதை (4)
- சினிமா (2)
- நினைவுக் குறிப்பு (1)
- நுால் அறிமுகம் (2)
- நேர்காணல்கள் (1)
- நேரும் எதிரும் (2)
- மாயத்திரை (3)
- முன்னுரைகள் (2)
- மொழியாக்கக் கவிதைகள் (2)
- விமர்சனங்கள் (3)
0 comments:
கருத்துரையிடுக