சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

தூர்ந்துபோன சுனையூற்றின் அடியில் உக்கியிருக்கும் புன்னகை

28 பிப்ரவரி, 2010

சித்தாந்தான்
........................................................................

திறந்து வைத்திருக்கிறேன் என் தெருவை
நீயோ புறக்கணித்துத் திரும்புகின்றாய்

யன்னல் கண்ணாடிகள் உடைந்து
சில்லுகளாய்ச் சிதறியிருக்கும் வீட்டின்
உட்புறமாய்
இன்னும் மீதமாயிருக்கிறது அந்திமப் புன்னகை

எதற்காக
என் கைகளை விடுவித்தாய்
புழுக்களாய் நெளிகின்றன உன் சொற்கள்
தேகத்தில்

மனந்திறக்காத வீட்டின் வரைபடத்தில்
தொங்கும் தூக்குக் கயிற்றில்
சுருக்கிடப்பட்டிருப்பது
நீயுமல்ல நானுமல்ல நம் நினைவுகள்

பருதி தாண்டாத சில பொழுதுகளை
சுமந்திருந்தோம் தோள்களில்

முடிவற்ற பேருந்துப் பிரயாணத்தில்
யன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்த
என்முகத்தல் அறைந்த காற்று
பரிசுத்தமற்ற மனத்தின் இழைகள்
அறுந்து போனதாய்ச் சொல்லிச் சென்றது

நீ போய் யாரிடமாவது சொல்லப்போவதில்லை
கருணையின் கடலளவு வலியை

நான் காலியாக இருக்கும் நாற்காலியைப் பார்த்துப்
புன்னகை செய்கிறேன்
என் தெருவில் நடந்து செல்கிறது
யாரோ வளர்க்கும் நாய்

நன்றி-எதுவரை (பெப்- மார்ச் 2010)

பெயரும் விம்பவெளி

04 பிப்ரவரி, 2010

சித்தாந்தன்
...............................................................
எனது கனவை
ஒரு பூச்சியின் சிறகிலிருந்து அவிழ்க்கின்றேன்
யார்யாரினதோ வீடுகளுக்குள்ளிருந்து
பெயர்ந்து வந்த நிலைக்கண்ணாடிகள் சூழ்ந்த
இந்த மாயவெளியில்
சிதிலமான என் மனதின் விம்பத்தை
கோடிமுறையும் கண்டு சலிப்படைகின்றேன்

பிறாண்டும் நகங்களோடுஒரு காலம்
என் கன்னத்தில் முத்தமென
பொய்யுருக்கொண்டு சிதறுகிறது
காயங்களின் மீது பெய்யும் மழையோ
வலியாய்ப் பெருகியோடுகிறது

கண்ணாடி வெளி முழுவதிலும்
காற்றின்; அலையும் சுவடுகள்

நிலைமறுக்கும் சகுணங்களை நிகழ்த்தி
விலகும் எல்லா முகங்களையும் கடந்து
வீடு திரும்பிப் படுக்கையில் சரியும் தருணம்
ஆறிப்போன மழையின் தூறலாய்
காதலின் குளிர்மை

கதவண்டை அசையும் நிழலுருக்களில்
குரோதங்களின் மனப்பிரதிமைகள்

எனதறையின் நிலைக்கண்ணாடிக்கும்
எனக்குமிடையில்
பெயரறியாத மனிதர்களின் மனச்சிதறல்கள்
பல்லுருவாகி விரிகையில்
கண்ணாடியிலிருந்து இறங்கி
வெளியேறத் தொடங்கிவிடும் என் விம்பம்

சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்