சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

கடல்வெளி

21 ஆகஸ்ட், 2011



தீரா அலையெழுப்புகிறது கடல்வெளி

சாத்தானும் கடவுளும்
அறியாத் தொலைவில் செல்கிறது
திசையற்றவர்களின் படகு

கடவுளே சாத்தானாகவும்
சாத்தானே கடவுளாகவும்
உருமாறிய தருணங்களை
அலையுமிழும் கடல்
அறிந்திருக்க நியாயமில்லை

தன் மடிநிறைந்திருக்கும்
குழந்தைகளை அது
அழைத்திருக்கவுமில்லை

அறியா முகங்ளை
அறியா தரையை
சென்றடையும் ஒரு நாளில்
அது தன் வயிற்றிலிருந்து
உதிர்க்கக் கூடும்
எண்ணற்ற பிணங்களை

சாத்தானோ கடவுளோ
கடலைத்தான் நம்பியிருக்கின்றனர்

கடலே சாத்தான்
கடலே கடவுள்

கடவுளும் சாத்தானும் உறங்கிய பின்னர்
கடலே காவு கொள்கிறது
கைவிடப்பட்டவர்களை

கடவுளோ சாத்தானோ
இல்லா பிரபஞ்ச வெளியை
கடல் வெளியே உட்கொள்ளும்

கவனம்
கடவுளும் சாத்தானும்
சபிக்கப்பட்டவர்களும்

சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்