சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

துண்டிக்கப்படும் உரையாடல்கள்

09 அக்டோபர், 2011



செவிகளின் கூர்மை மங்கத்தொடங்கிய பிறகு
நீ கூவியழைக்கத் தொடங்கினாய்

இளஞ்சிவப்பு மலர்ச் செடிகளில்
கள்ளிமுட்கள் மலருகையில்
அதை அற்புதமென பறைசாற்றினாய்

இப்போதெல்லாம்
நகக்கணுக்களவு சுருங்கிய வார்த்தைகளோடு
எதிர்ப்படுகையில் புன்னகை மட்டும்
நிலாவிலிருந்து வடிகிறது ஒளியாய்

மமதையில் முறுக்கேறிய உனது சொற்களை
நகைத்திடமுடியாமலும்
புறங்கையால் விலக்கிடமுடியாமலும்
மணிக்கட்டின் கடிகாரம் மவுனமாய்க் கரைகிறது

எதையெதைச் சொல்லி உரித்தெறிய கணங்களை

அம்மணமாய் அலையும் சிறுவனின்
சலனமற்ற முகத்தை
பல தடவையும் பொருத்த வேண்டியிருக்கின்றது


எறும்புகளின் இரையாய்
என் சரீரத்தைத் தின்று மெல்லும்
இந்த யுகம் போகட்டும்

வேறென்ன
தோழமையின் நித்தியத்தை
பாசாங்காய் அறிவிக்கும் காலைகளின் ஆரவாரத்தை
‘சூ’ வெனத் துரத்தவியலாது
உள்ளங்கைகளிரண்டிலும் இரையும் கடல்கள்

சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்