சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

நாவுலர்ந்து போன மழை

02 ஜூன், 2012




சித்தாந்தன்

கொடு மழையை
கொத்திச் செல்கிறது காக்கை

தன் அலகின் கருமை தடவிய
வானத்தில் அது பறந்தபடியிருக்கிறது

காடுகளின் நாவறண்ட பொழுதில்
கொத்திச் சென்ற மழையினை
பு+மியின் ஆழத்து நீர்ச்சுனைகளுக்குள்
ஒளித்து வைக்கிறது

தாகங்கள் திறந்த காடுகளில்
உலர்ந்த நாவுகளை வானுக்குக் காட்டி
காத்திருக்கின்றன பட்ஷிகளும் மிருகங்களும்

வெறும் பஞ்சுக் குவியல்களான மேகங்கள்
வான் முழுமையும் படிந்திருக்கின்றன

காகம்
தாகங்கள் வற்றிப் போகும்படியாக
தன் இறக்கைகளால் மூட்டுகிறது
பெருநெருப்பை

பொசுங்கிய காட்டின் சாம்பரில்
புதையுண்டு போகின்றன எண்ணற்ற நாவுகள்

மாயங்காட்டி
வான் முகட்டில் வட்டமிடும் காகம்
மீண்டும் கொணர்ந்திருக்கிறது மழையை
நாவுலர்ந்து போன மழையை

கருமை மூடிய வானம்
நனைகிறது வெந்நெருப்பின் மழையில்

சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்