சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

பொழுதுகளைத் தின்பவன்

24 பிப்ரவரி, 2012

சித்தாந்தன்

இரவறையில் சிதறிய இரவின்
சிறு துகழ்களை பொறுக்கிக் கொண்டு
பகலின் விளிம்புக்குச் செல்லுகின்றேன்.
முகமூடிகளின் தெருக்களிலிருந்து சலிப்புற்றுத் திரும்பும்
நாட்களை உறிஞ்சிக் கொள்கின்றன சுவர்கள்.
ஏதைக் கொண்டும் கடக்கவியலாத
பொழுதுகளின் மேலே சூரியன் கந்தல்த் துணியாகத்
தொங்கிக்கொண்டிருக்கின்றது.
யாவற்றுக்கும் விளக்கங்களைச் சொல்லி
ஓய்கையில்
நிழல்களின் முற்றத்தில் மொய்கின்றது
ஆயிரமாயிரம் பாலைவனங்களின் தடங்கள்.
எல்லாமே மாயத்தனங்களுடன்
அறைமுகடெங்கும் படரவிக்கிடக்கின்றன.
வருகையாளர்களிடம் பேச எதுவுமில்லாதவனின்
தேநீர்க் குவளைகளில் நிரம்பித் ததும்புகிறது வெறுமை.
நேவெடுக்கும் கால்களைப் புறக்கணிக்கின்ற
சம்பாசனைகளால் நிறைந்திருக்கும் இருளறையில
யாருமேயில்லை
பகலும் இரவும் அற்ற பொழுதுகளைத் தின்று
உடல் பருத்தவனின் கண்களுக்குள்
உறைந்துகிடக்கின்றன எண்ணற்ற காட்சிகள்.

சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்