சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

நிகழ்கணத்தின் வலி

13 மே, 2008


சித்தாந்தன்
----------------------------------------------------------
எங்களுக்கிடையில் பொம்மை
தன்சாகசங்களை நிகழ்த்துகிறது
எம் இருசோடிக் கண்களுக்கப்பாலும்
அதன்கண்கள்
சூரியனிலிருந்து வந்திறங்குகின்றன

பொம்மையுடனான சிநேகிதம்
எம்மையும் பொம்மைகளாக்கிவிட்டது
நாம் சிரித்தோம்
அது பொம்மையின் சிரிப்பு
நாம் அழுதோம்
அது பொம்மையின் அழுகை
நாம் கூத்தாடினோம்
அது பொம்மையின் களிப்பு

மேலும் புதிய புதிய பொம்மைகளால்
எமதுஅறையை அலங்கரிக்க விரும்பினோம்
எமது உலகத்தினது அற்புதங்களை
பொம்மைகளிலிருந்து ஆரம்பிக்கலானோம்

பொம்மைகளுக்கிடையில்
பொம்மைகளாய் வாழ்வதிலும் கொடிது
மனிதர்களுக்கிடையில்
பொம்மைகளாய் வாழ்வது

இன்றைய விருந்தினர்கள்
பொம்மைகளையே பரிசளிக்கின்றனர்

ஒரு பொம்மை பற்றிய கவிதையை
பொம்மையிலிருந்து ஆரம்பிப்பதை விடவும்
எம்மிலிருந்து தொடங்குவதே நல்லது

நீண்டோடிய நாட்களின் பின்
இன்றுதெருவுக்கு வர நேர்ந்தது
மனிதர்கள் எம்மைச்சூழ்ந்து கொண்டு
கற்களை வீசினர் தூசித்தனர்
உடல் கிள்ளிக் கொண்டாடினர்

எமது அழுகையை
பொம்மைகளினது அழுகை என்றனர்
எமது கண்ணீரை
பொம்மைகளினது கண்ணீர் என்றனர்

கடைசியில் நாம்
பொம்மைகளாகவே இறந்துபோனோம்
------------------------------------------------------------------

சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்