சித்தாந்தன்
----------------------------------------------------------
யாருமற்ற வீட்டை
அவசரமாக பூட்டிவிட்டு நடக்கிறேன்
உள்ளேயிருந்து யாரும்
அழைத்துவிடுவார்களோ என்ற பதட்டத்துடன்
எப்படியோ ஒரு கடலை உள்விட்டுவந்த பதட்டம்
வந்துவிடுகிறது
நீ கைகளைப்பிசைந்து பாவனைகளுக்குள்
காதலை மூழ்கடித்துக்கொண்டிருந்தாய்
எனது பதட்டம்
யாருமற்ற வீட்டின் கதவுகளுக்குப் பின்னால்
கேட்டுக்கொண்டிருக்கும்
அருபங்களின் உரையாடலில் குவிந்திருந்தது
வீடு திரும்புகையில்
மதுப்புட்டிகள் காலியாகிக்கிடக்கின்றன
கவிதைகளில் ப+ச்சிகள்
காதல் ததும்பும் சொற்களை அரித்துவிட்டிருக்கின்றன
என் தலையணை உறைகளில்
எண்ணை பிசுபிசுப்பு ஒட்டிக்கிடக்கிறது
சமையலறை நீர்க்குழாய் திறந்து விடப்பட்டிருக்கிறது
ஆடைகள் கலைந்துகிடக்கின்றன
சாப்பிட்டுவிட்டு கழுவாமலே கிடக்கும் கோப்பைகளில்
ஈக்கள் மொய்த்தபடியிருக்கின்றன
எனது காலடி மட்டும் கேட்கும் நடையின் பின்னே
மேலுமொருவரின் காலடியோசை
கடலின் அலையடித்தலாய் கேட்டுக்கொண்டிருக்கிறது
துயில் முட்டபடுக்கையில் சரிகையில்
என் போர்வையை யாரோ இழுத்துப்போகிறார்கள்.
காலை 5.51 26.03.2008
------------------------------------------------------
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அஞ்சலி
சிறுகதைகள்
விமர்சனங்கள்
தமருகம்
இணைப்புக்கள்
- ஃபஹீமாஜஹான்
- அ.முத்துலிங்கம்
- அகேனம்
- அஜந்தகுமார்
- அருண்மொழிவர்மன்
- எஸ்.ராமகிருஷ்ணன்
- எஸ்போஸ்
- கடற்கரய்
- கருணாகரன்
- கலாப்ப்ரியா
- குட்டி ரேவதி
- சஜிதரன்
- சுதேசம்
- ஜமாலன்
- ஜெயமோகன்
- டிசே தமிழன்
- தானா விஷ்ணு
- தீபம்
- துவாரகன்
- தேவ அபிரா
- நாகார்ஜூனா
- நாஞ்சில்நாடன்
- பெட்டை
- முரண்வெளி
- மெலிஞ்சி முத்தன்
- லீனா மணிமேகலை
- வண்ணதாசன்
- வண்ணநிலவன்
- ஷோபாசக்தி
- ஸ்மைல் வித்தியா
பகுதிகள்
- அறிமுகவுரை (1)
- எதிர்வினை (2)
- கட்டுரை (2)
- கடிதம் (1)
- கவிதைகள் (81)
- குறும்படம் (1)
- சஞ்சிகை அறிமுகம் (2)
- சிறுகதை (4)
- சினிமா (2)
- நினைவுக் குறிப்பு (1)
- நுால் அறிமுகம் (2)
- நேர்காணல்கள் (1)
- நேரும் எதிரும் (2)
- மாயத்திரை (3)
- முன்னுரைகள் (2)
- மொழியாக்கக் கவிதைகள் (2)
- விமர்சனங்கள் (3)
வலைப்பதிவுக் காப்பகம்
-
►
2011
(19)
- ► செப்டம்பர் (2)
-
►
2010
(22)
- ► செப்டம்பர் (1)
-
►
2009
(12)
- ► செப்டம்பர் (3)
-
▼
2008
(29)
- ► செப்டம்பர் (2)
-
▼
ஜூன்
(10)
- பிடாரனின் திகைப்பூட்டும் கனவுகளிலிருந்து நான் தப்ப...
- நகரத்திற்கு வந்தவனின் இரண்டு கவிதைகள்
- மகா ஜனங்களின் அழுகை அல்லது அரசர்களின் காலம்
- உரையாடலில் தவறிய சொற்கள்
- எரிதலின் வலி
- தருணம்/2
- கருணை வேண்டிக் காத்திருத்தல்
- தருணம்/1
- காற்றில் இசைப்பவனின் கனவு இசை
- சந்திரபோஸ் சுதாகர் எரிந்து கொண்டிருக்கும் காலத்தின...
0 comments:
கருத்துரையிடுக