சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

தருணம்/2

15 ஜூன், 2008

சித்தாந்தன்
----------------------------------------------------------
நாய் தின்று மீதம் வைத்த என்பைப்போல
என்குரல் கிடக்கிறது

முடிவற்ற எண்களாய் விரியும் என் வார்த்தைகளை
நீ தூசு தட்டிக்கொண்டிருந்த இரவில்
பனியின் வெண்படிவு யன்னல் திரைச்சீலைகளில்
ஈரலித்தது

உன்னைப்பற்றிய சொற்களின் ஆழங்களில்
காதல் ததும்பும் நீர்ச்சுனை உள்ளடங்கியிருக்கிறது
மறுதலிப்பின் உதிர்நாழிகைகளில் வாசிக்கத்தொடங்கியிருந்தாய்
காமம் கிளர்ந்தூரும் வரிகளை

என் குறியிறங்கி தலையணைக்கடியில்
சர்ப்பமாய்ச் சுருண்டது
ஓரிரவில் குறியற்றவனாய் வாழ நேர்ந்தது

சுவர்கள் கடலாய்ப்பிரதிபலித்தன
மீன்கள் கலவி நட்சத்திரங்கள் பிறந்தன
நீ சுவர்க்கடலில் பிணமாய் மிதந்தபடியிருந்த என்சடலத்தை
பிய்த்துத்தின்னும் மீன்களை வருடிக்கொடுத்தாய்
அவற்றின் பற்கள் கிழித்த எனதுடலில் வழியும் குருதி
இன்னொரு கடலாவது தெரியாமல்

அலைகள் ஓய்ந்து கடல் வற்றத்தொடங்கிய பிறகு
அவசரத்தில் எழுந்து தலையணையடிலிருந்து
என்குறியை எடுத்தேன்
மீனாய்த்துள்ளி சுவர்க்கடலில் மூழ்கியது

இன்னும் நீ வாசித்தபடியிருக்கிறாய்
குறியற்றவனின் காமம் கிளர்ந்தூரும் சொற்களை.

இரவு 11.26 24.03.2008
------------------------------------------------------------

சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்