சித்தாந்தன்
----------------------------------------------------------
நாய் தின்று மீதம் வைத்த என்பைப்போல
என்குரல் கிடக்கிறது
முடிவற்ற எண்களாய் விரியும் என் வார்த்தைகளை
நீ தூசு தட்டிக்கொண்டிருந்த இரவில்
பனியின் வெண்படிவு யன்னல் திரைச்சீலைகளில்
ஈரலித்தது
உன்னைப்பற்றிய சொற்களின் ஆழங்களில்
காதல் ததும்பும் நீர்ச்சுனை உள்ளடங்கியிருக்கிறது
மறுதலிப்பின் உதிர்நாழிகைகளில் வாசிக்கத்தொடங்கியிருந்தாய்
காமம் கிளர்ந்தூரும் வரிகளை
என் குறியிறங்கி தலையணைக்கடியில்
சர்ப்பமாய்ச் சுருண்டது
ஓரிரவில் குறியற்றவனாய் வாழ நேர்ந்தது
சுவர்கள் கடலாய்ப்பிரதிபலித்தன
மீன்கள் கலவி நட்சத்திரங்கள் பிறந்தன
நீ சுவர்க்கடலில் பிணமாய் மிதந்தபடியிருந்த என்சடலத்தை
பிய்த்துத்தின்னும் மீன்களை வருடிக்கொடுத்தாய்
அவற்றின் பற்கள் கிழித்த எனதுடலில் வழியும் குருதி
இன்னொரு கடலாவது தெரியாமல்
அலைகள் ஓய்ந்து கடல் வற்றத்தொடங்கிய பிறகு
அவசரத்தில் எழுந்து தலையணையடிலிருந்து
என்குறியை எடுத்தேன்
மீனாய்த்துள்ளி சுவர்க்கடலில் மூழ்கியது
இன்னும் நீ வாசித்தபடியிருக்கிறாய்
குறியற்றவனின் காமம் கிளர்ந்தூரும் சொற்களை.
இரவு 11.26 24.03.2008
------------------------------------------------------------
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அஞ்சலி
சிறுகதைகள்
விமர்சனங்கள்
தமருகம்
இணைப்புக்கள்
- ஃபஹீமாஜஹான்
- அ.முத்துலிங்கம்
- அகேனம்
- அஜந்தகுமார்
- அருண்மொழிவர்மன்
- எஸ்.ராமகிருஷ்ணன்
- எஸ்போஸ்
- கடற்கரய்
- கருணாகரன்
- கலாப்ப்ரியா
- குட்டி ரேவதி
- சஜிதரன்
- சுதேசம்
- ஜமாலன்
- ஜெயமோகன்
- டிசே தமிழன்
- தானா விஷ்ணு
- தீபம்
- துவாரகன்
- தேவ அபிரா
- நாகார்ஜூனா
- நாஞ்சில்நாடன்
- பெட்டை
- முரண்வெளி
- மெலிஞ்சி முத்தன்
- லீனா மணிமேகலை
- வண்ணதாசன்
- வண்ணநிலவன்
- ஷோபாசக்தி
- ஸ்மைல் வித்தியா
பகுதிகள்
- அறிமுகவுரை (1)
- எதிர்வினை (2)
- கட்டுரை (2)
- கடிதம் (1)
- கவிதைகள் (81)
- குறும்படம் (1)
- சஞ்சிகை அறிமுகம் (2)
- சிறுகதை (4)
- சினிமா (2)
- நினைவுக் குறிப்பு (1)
- நுால் அறிமுகம் (2)
- நேர்காணல்கள் (1)
- நேரும் எதிரும் (2)
- மாயத்திரை (3)
- முன்னுரைகள் (2)
- மொழியாக்கக் கவிதைகள் (2)
- விமர்சனங்கள் (2)
வலைப்பதிவுக் காப்பகம்
-
►
2011
(19)
- ► செப்டம்பர் (2)
-
►
2010
(22)
- ► செப்டம்பர் (1)
-
►
2009
(12)
- ► செப்டம்பர் (3)
-
▼
2008
(29)
- ► செப்டம்பர் (2)
-
▼
ஜூன்
(10)
- பிடாரனின் திகைப்பூட்டும் கனவுகளிலிருந்து நான் தப்ப...
- நகரத்திற்கு வந்தவனின் இரண்டு கவிதைகள்
- மகா ஜனங்களின் அழுகை அல்லது அரசர்களின் காலம்
- உரையாடலில் தவறிய சொற்கள்
- எரிதலின் வலி
- தருணம்/2
- கருணை வேண்டிக் காத்திருத்தல்
- தருணம்/1
- காற்றில் இசைப்பவனின் கனவு இசை
- சந்திரபோஸ் சுதாகர் எரிந்து கொண்டிருக்கும் காலத்தின...
0 comments:
கருத்துரையிடுக