சித்தாந்தன்
---------------------------------------------------------------
இலைகளையிழந்த வனத்தின் புதிர்ப்பாதைகளிலும்
சுவடுகளை உறிஞ்சும் பெரும் பாலையிலுமாக
பயணிக்க நேரிட்டது.
கழுதைகளை விடவும் அதிகம் சுமக்கப்பழகிவிட்டோம்
அல்லது அவர்கள் பழக்கப்படுத்தியிருக்கிறார்கள்
நண்ப,
துப்பாக்கிச் சன்னங்கள் அலையும் தெருக்களில்
கத்திகளாய்முளைத்திருக்கும் பார்வைகளுக்குமிடையிலும்
நீ பேசிக்கொண்டிருந்தாய்
கைதுகளை
சித்திரவதைகளை
காலத்திற்கும் அகாலத்திற்குமிடையில்
ஒளி அவிந்து உருகும் வாழ்வை
சலனமற்ற இரவுகள்
நாய்களின் ஊளையால் நடுங்குவதை
தெருவின் கடைசிப்பயணியாய்
வீடு திரும்புதலின் நிச்சயமின்மையை
உன்னை சிலந்தி வலையில்
சிக்கித் தவிக்கும் பூச்சியாய் உணர்ந்தபோதும்
பாறையின் வேர்ஆழத்துள்ளிருந்து
உனது சொற்களை உருவாக்கினாய்
வன்முறையையையும் அதிகாரத்தையும்
கடைசிவரையிலும் எதிர்த்துக்கொண்டேயிருந்தாய்
நண்பனே
உனது பயணத்தின் சாட்சியாய் நீயே இருந்தாய்
உனது கவிதைகளின் அர்த்தமாய் நீயே இருந்தாய்
கடைசியில்
எரியும் காலத்தின் புகை உன்மீது படிந்தது
அவர்கள் வன்முறையின் உச்சக்குரலில் பேசினார்கள்
நீயோ
அதிகாரத்தின் குருதி முகத்தில் காறி உமிழ்ந்தாய்
முடிவில் உன்னைக் கொன்றார்கள்
ஓரு பறவையின் குரலை இழந்த துயரம்
எங்களில் படிந்து போனது
நீ அற்பமான காலத்தின் மகா கவிஞன்
அப்படித்தான் எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள்
நண்ப,
உன் சொற்களுக்கடியில் ஓடிக்கொண்டிருக்கும் பெருநதியில்
வாழ்வின் துர்க்கனவுகளுடன் கவிதைகள் மிதக்கின்றன.
---------------------------------------------------------------------
00குறிப்பு: சந்திரபோஸ் சுதாகர்
எஸ்போஸ், போஸ் நிஹாலே என அறியப்பட்ட 90 களின் முக்கிய கவிஞர்களுள் ஒருவராவார். 16.04.2007 அன்று இனந்தெரியாத ஆயுததாரிகளால் அவரின் மகனின் முன்னாலேயே வவுனியாவில் அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
Related Posts:
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அஞ்சலி
சிறுகதைகள்
விமர்சனங்கள்
தமருகம்
இணைப்புக்கள்
- ஃபஹீமாஜஹான்
- அ.முத்துலிங்கம்
- அகேனம்
- அஜந்தகுமார்
- அருண்மொழிவர்மன்
- எஸ்.ராமகிருஷ்ணன்
- எஸ்போஸ்
- கடற்கரய்
- கருணாகரன்
- கலாப்ப்ரியா
- குட்டி ரேவதி
- சஜிதரன்
- சுதேசம்
- ஜமாலன்
- ஜெயமோகன்
- டிசே தமிழன்
- தானா விஷ்ணு
- தீபம்
- துவாரகன்
- தேவ அபிரா
- நாகார்ஜூனா
- நாஞ்சில்நாடன்
- பெட்டை
- முரண்வெளி
- மெலிஞ்சி முத்தன்
- லீனா மணிமேகலை
- வண்ணதாசன்
- வண்ணநிலவன்
- ஷோபாசக்தி
- ஸ்மைல் வித்தியா
பகுதிகள்
- அறிமுகவுரை (1)
- எதிர்வினை (2)
- கட்டுரை (2)
- கடிதம் (1)
- கவிதைகள் (81)
- குறும்படம் (1)
- சஞ்சிகை அறிமுகம் (2)
- சிறுகதை (4)
- சினிமா (2)
- நினைவுக் குறிப்பு (1)
- நுால் அறிமுகம் (2)
- நேர்காணல்கள் (1)
- நேரும் எதிரும் (2)
- மாயத்திரை (3)
- முன்னுரைகள் (2)
- மொழியாக்கக் கவிதைகள் (2)
- விமர்சனங்கள் (3)
வலைப்பதிவுக் காப்பகம்
-
►
2011
(19)
- ► செப்டம்பர் (2)
-
►
2010
(22)
- ► செப்டம்பர் (1)
-
►
2009
(12)
- ► செப்டம்பர் (3)
-
▼
2008
(29)
- ► செப்டம்பர் (2)
-
▼
ஜூன்
(10)
- பிடாரனின் திகைப்பூட்டும் கனவுகளிலிருந்து நான் தப்ப...
- நகரத்திற்கு வந்தவனின் இரண்டு கவிதைகள்
- மகா ஜனங்களின் அழுகை அல்லது அரசர்களின் காலம்
- உரையாடலில் தவறிய சொற்கள்
- எரிதலின் வலி
- தருணம்/2
- கருணை வேண்டிக் காத்திருத்தல்
- தருணம்/1
- காற்றில் இசைப்பவனின் கனவு இசை
- சந்திரபோஸ் சுதாகர் எரிந்து கொண்டிருக்கும் காலத்தின...
0 comments:
கருத்துரையிடுக