
----------------------------------------------------------
காற்றுக்கு புல்லாங்குழல் வாசிப்பவன்
இசையின் உச்சக்கதவுகளைத் திறந்து
அம்மணமாய் தெருவில் ஓடுகிறான்
அவன் கையில் காலவதியான கபாலத்தினது
தாறுமாறான ரேகைகள்
புதிர்க்கோடுகளாலான அவனது கோட்டு;ப்படத்தில்
பிறாண்டும் புனைகளின் கால்த்தடங்கள்
காற்றை பொருட்டாக கொள்ளாத விரல்களில்
இசையின் நரம்புகள் விம்மி முறுகுகின்றன
இசையின் பொருக்கு வெடித்திருக்கும்
அவனது உதடுகளில்
ப+த்திருக்கின்றன மலர்கள்
சொர்ப்பனத்தில் வெளியேறிய
ஸ்கலிதத்தின் பிசுபிசுப்போடு
--------------------------------------------------
0 comments:
கருத்துரையிடுக