சித்தாந்தன்
------------------------------------------------------------------------
நகரத்திலிருந்து எடுத்துச்செல்வதற்கு
என்ன இருக்கிறது
வருஸாந்திரங்களின் மாயவிழிகளிடை
புரளும் வர்ணங்களின்
அந்தகார ஒலியில்
மூச்சுத்திணறகிடக்கின்ற சூரியனின்
ஓளியலைகளை
விழுங்கித்தொலைத்திருக்கிறது நகரம்
இந்த நகரத்திலிருந்து
எதை எடுத்துச்செல்லமுடியும்
இலைக்கணுக்களில் தெறித்த
மரங்களின் கனவுகளையும்
காற்றில் அவிழ்ந்து அலைகிற
பறவைகளின் குரல்களையும்
வழிதவறிச்சென்ற மேய்ப்பர்கள்
அள்ளிப்போய்விட்டனர்
தெருக்களெங்கும்
அவர்களின் வீரச்சொற்களும்
இசைமுறிந்த பாடல்களும் ஏராளம்
இந்த நாற்றச்சகதியிடை
எப்படி வாழ முடியும் அமைதியாய்
நகரத்தில் வாழுகிற
ஒவ்வொரு மனிதனின் தலையின் மேலும்
சுருக்குக் கயிறுகள் தொங்குகின்றன
தூக்கம்
துர்க்கனவுகள் மிக்கது
சில்வண்டின் ஒலியில் கூட
வன்மம் எரிவதான
சலனம் நிரம்பிய இரவுகள்
நகரத்தை தூங்க வைப்பதற்கு
மௌனப்பாட்டுக்களை இசைப்பவர்களே
மனிதர்களின் தூக்கத்தையும்
இரவுகளில் களவாடிச் செல்கின்றனர்
நகரம்
ரகசியத்தீயில் மிதக்கிறது
பூக்களைச் சாபமிட்டு
தீ வளர்க்கும் மகாயாகத்தை
தீ வைத்திருப்போர் செய்கிறார்கள்
ரகசியத் தீயில்
வீடுகளுக்குள் புழுக்கமெடுக்கிறது
வெம்மை வியர்வை
மனங்களுக்குள் வழிகிறது
தீயின் பல முகங்களிலிருந்தும்
பாழடைந்த ஒரு நகரத்தின்
தடயங்களை வரைகிறார்கள்
தீ வளர்ப்போர்
அவர்களிடம் அழிவிலிருந்து பெருகும்
இசைச் சொற்கள் இருக்கின்றன
சொற்கள் கொடியவை
குழந்தைகளின் பூக்களை பறித்துவிட்டு
எரியும் கனவுகளை வளர்த்துச் செல்லும்
சொற்கள்
தணற்காலச் சொற்கள்
சிலுவைகளால் நிரம்பிய நகரம்
தனது
பூர்வீககாலப் பெருமையின் பாடலை
அவலக்குரலில் பாடிக்கொண்டிருக்கிறது
நகரத்தின் மனிதர்களுக்கு
பாடல் கேட்பதேயில்லை
தீ பற்றிய ரகஸியம்
அவர்களின் காதுகளை அடைத்துவிட்டிருக்கிறது
மனிதர்கள் மனிதர்கள்
காலத்தை உறங்க வைத்துக்கொண்டு
விழிகள் முட்டிய பயங்களோடு
இரவுகளை கனவுகளால்
தூங்கும் மனிதர்கள்
தூங்கும் மனிதர்கள்
காலப்பெருவெளியில்
நிழல்களில் தீப்பிடித்து அவலமாகிப்போகிற
மனிதர்களை
யார் மன்னிக்க முடியும்
அவர்கள் புலம்பினார்கள்
தங்கள் கனவாயிருந்த பறவையின் நிழலில்
தீயின் நிழல்கள் உறுத்தக்கிடப்பதாகவும்
பறவைக்கனவை
அகாலத்தீ அள்ளி வைத்திருப்பதை
தங்கள் சந்ததியால் தாங்கமுடியுமா என்றும்
நான் நகரத்து மனிதர்களின்
பறவைக்கனவை
எடுத்துச் செல்கிறேன்
மகா காலத்தின்
அற்ப மனிதர்களிடமிருந்தும்
நாற்றமெடுக்கும் நகரத்திலிருந்தும்
அதை எடுத்துச் செல்கிறேன்
-----------------------------------------------------------------
2002
Related Posts:
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அஞ்சலி
சிறுகதைகள்
விமர்சனங்கள்
தமருகம்
இணைப்புக்கள்
- ஃபஹீமாஜஹான்
- அ.முத்துலிங்கம்
- அகேனம்
- அஜந்தகுமார்
- அருண்மொழிவர்மன்
- எஸ்.ராமகிருஷ்ணன்
- எஸ்போஸ்
- கடற்கரய்
- கருணாகரன்
- கலாப்ப்ரியா
- குட்டி ரேவதி
- சஜிதரன்
- சுதேசம்
- ஜமாலன்
- ஜெயமோகன்
- டிசே தமிழன்
- தானா விஷ்ணு
- தீபம்
- துவாரகன்
- தேவ அபிரா
- நாகார்ஜூனா
- நாஞ்சில்நாடன்
- பெட்டை
- முரண்வெளி
- மெலிஞ்சி முத்தன்
- லீனா மணிமேகலை
- வண்ணதாசன்
- வண்ணநிலவன்
- ஷோபாசக்தி
- ஸ்மைல் வித்தியா
பகுதிகள்
- அறிமுகவுரை (1)
- எதிர்வினை (2)
- கட்டுரை (2)
- கடிதம் (1)
- கவிதைகள் (81)
- குறும்படம் (1)
- சஞ்சிகை அறிமுகம் (2)
- சிறுகதை (4)
- சினிமா (2)
- நினைவுக் குறிப்பு (1)
- நுால் அறிமுகம் (2)
- நேர்காணல்கள் (1)
- நேரும் எதிரும் (2)
- மாயத்திரை (3)
- முன்னுரைகள் (2)
- மொழியாக்கக் கவிதைகள் (2)
- விமர்சனங்கள் (2)
வலைப்பதிவுக் காப்பகம்
-
►
2011
(19)
- ► செப்டம்பர் (2)
-
►
2010
(22)
- ► செப்டம்பர் (1)
-
►
2009
(12)
- ► செப்டம்பர் (3)
0 comments:
கருத்துரையிடுக