
.............................................................
காலைப் பனிப்புகையடர்ந்த
இரண்டு உருவங்களுக்குள்
கூறுபட்டுக்கிடந்த இதயத்தசையை
காதலின் மொச்சை மூடிக்கிடந்தது
புருவங்களில் விழியேறி
கண்கள் திரவங்களாய் உருண்டன
ஆழ்நதியோடித்திரும்பலில்
காத்திருந்தன மண்பொம்மைகள்
அந்தமற்று வரிகிற அதட்டுச் சிரிப்புகளுக்குள்
அழுந்திப்போய்விடுகிறது குழந்தைப்புன்னகை
மிஞ்சியிருக்கும் வலியை
தவிர்த்துவிட முடிவதில்லை
நீ பசியாறும் இலையோர மடிப்புக்களில்
எனது இரத்தத்தை மீதமாக்கிவிட்டு
நான் உறங்கப்போகிறேன்
பொம்மை வழிகளை மூடிக்கொண்டு
எனக்குத்தெரியும்
நீதான் என்னை
அவதானித்துக்கொண்டிருக்கிறாய்
0 comments:
கருத்துரையிடுக