சித்தாந்தன்
............................................
எங்கள் தெருக்களில் குழந்தைகளைக்
காணவில்லை
குழந்தைகளின் கனவுகளை மிதித்துக்கொண்டு
இராணுவ வாகனங்கள் விரைந்து செல்கின்றன
முகங்களை கறுப்புத்துணியால் கட்டிய இராணுவர்கள்
நடமாடத் தொடங்கிய பிறகு
குழந்தைகள் தெருக்களை இழந்தன
தாய்மார் இராணுவத்தைப் பயங்காட்டி
உணவூட்டத் தொடங்கிய பிறகு
தெருக்கள் குழந்தைகளை இழந்தன
குழந்தைளின் உலகங்களின் அற்புதங்களை
ஆயுதங்கள் தின்னத்தொடங்கிவிட்டன
சுண்டல்க்காரன் வெறுமனே கூவித்திரிகிறான்
ஜஸ்பழவான்கள் தரிக்காது செல்கின்றன
தெருநாய்கள் அச்சமற்றுத்திரிகின்றன
லான்மாஸ்ரர்களைத் துரத்திச் சென்று ஏற எவருமில்லை
குழந்தைகளை இழந்த தெருக்கள்
தெருக்களாயிருப்பதில்லை
இராணுவ வாகனங்களின் புகை
மரங்களில் இருளாய் படிந்திருக்கிறது
மின் கம்பங்களில் தொங்குகின்ற பட்டங்கள்
காற்றில் கிழிபடுகின்றன
மரக்கிளைகளில் கீச்சிடும் குருவிகளின் குரலாய்
உதிர்கின்றன இலைகள்
பலூனும் முகமூடியும் விற்கும் முதியவனின்
பாடல்களில் வழிகிறது
குழந்தைகளை இழந்த தெருக்களின் துயர்
மரநிழல் குடிசையில் முடங்கிக்கிடக்கும்
சிறுவன்
தனது குரும்பட்டித்தேரையும்
கறள் ஏறிய சைக்கிள் வளையத்தையும்
அதன் ஓட்டு தடியையும்
எடுத்துப்பார்த்து விடும் பெருமூச்சை
உஸ்ணம் நிரம்பிய காற்று குடிக்கின்றது
ஊஞ்சல்களில் குந்தியிருக்கிறது
சிறகுகள் கத்தரிக்கப்பட்ட வெறுமை
குழந்தைகளின் சுவடுகள் தொலைந்த தெருக்களில்
இராணுவத்தடங்கள் பெருகிக்கிடக்கின்றன
விரைந்து செல்லும் இராணுவ வாகனங்களின்
இரைச்சல்களுக்கிடையில் கேட்கிறது
தன் குழந்தையை
இராணுவ வண்டிக்கு காவுகொடுத்த
தாயின் ஒப்பாரி.
08.08.2008 இரவு.9.49
Related Posts:
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அஞ்சலி
சிறுகதைகள்
விமர்சனங்கள்
தமருகம்
இணைப்புக்கள்
- ஃபஹீமாஜஹான்
- அ.முத்துலிங்கம்
- அகேனம்
- அஜந்தகுமார்
- அருண்மொழிவர்மன்
- எஸ்.ராமகிருஷ்ணன்
- எஸ்போஸ்
- கடற்கரய்
- கருணாகரன்
- கலாப்ப்ரியா
- குட்டி ரேவதி
- சஜிதரன்
- சுதேசம்
- ஜமாலன்
- ஜெயமோகன்
- டிசே தமிழன்
- தானா விஷ்ணு
- தீபம்
- துவாரகன்
- தேவ அபிரா
- நாகார்ஜூனா
- நாஞ்சில்நாடன்
- பெட்டை
- முரண்வெளி
- மெலிஞ்சி முத்தன்
- லீனா மணிமேகலை
- வண்ணதாசன்
- வண்ணநிலவன்
- ஷோபாசக்தி
- ஸ்மைல் வித்தியா
பகுதிகள்
- அறிமுகவுரை (1)
- எதிர்வினை (2)
- கட்டுரை (2)
- கடிதம் (1)
- கவிதைகள் (81)
- குறும்படம் (1)
- சஞ்சிகை அறிமுகம் (2)
- சிறுகதை (4)
- சினிமா (2)
- நினைவுக் குறிப்பு (1)
- நுால் அறிமுகம் (2)
- நேர்காணல்கள் (1)
- நேரும் எதிரும் (2)
- மாயத்திரை (3)
- முன்னுரைகள் (2)
- மொழியாக்கக் கவிதைகள் (2)
- விமர்சனங்கள் (3)
5 comments:
சிந்தாந்தன்
22 ஆகஸ்ட், 2008 அன்று AM 9:32"விரைந்து செல்லும் இராணுவ வாகனங்களின்
இரைச்சல்களுக்கிடையில் கேட்கிறது
தன் குழந்தையை
இராணுவ வண்டிக்கு காவுகொடுத்த
தாயின் ஒப்பாரி."
மிகச் சரியான வரிகள்.இது தான் அரசு நடத்திக் கொண்டிருக்கும் மனிதாபிமான யுத்தத்தின் உண்மை முகம்.
வலி நிரம்பிய வாழ்வைக் காவிக் கொண்டு வன்னி மக்கள் மர நிலழ்களில் விடப் பட்டிருக்கையில் யாழ்ப்பாணத்திலோ வீட்டுக் காவலில் வைக்கப் பட்டிருக்கிறார்கள்.
வேறென்ன சொல்வது???
"பலூனும் முகமூடியும் விற்கும் முதியவனின்
23 ஆகஸ்ட், 2008 அன்று PM 8:00பாடல்களில் வழிகிறது
குழந்தைகளை இழந்த தெருக்களின் துயர்"
இந்த வரிகள் நன்றாக இருக்கின்றன என்று சொல்ல முடியவில்லை சித்தாந்தன்; அது புனைவில்லை ஆனபடியால். மனதை அசைக்கும் கவிதைகள்.
நட்புடன் தமிழ்நதி
26 ஆகஸ்ட், 2008 அன்று PM 11:33உங்கள் கருத்துக்களுக்கு நன்றி
யுத்தத்தின் நெருக்கடி எம்மை எப்போதும் அலைக்களித்துக் காண்டே இருக்கிறது யுத்தத்திற்து அப்பால் ஒளிர்ந்து பொண்டிருக்கும் வாழ்வை தரிசிக்கும் கனவுகளுடன்தான வாழ முடிகின்றது.
உங்கள் கருத்துக்களைத் தொடர்ந்து எழுதுங்கள்
நன்றி பஹிமா
27 ஆகஸ்ட், 2008 அன்று PM 10:04சிறைக்குள் அடைபட்டு வாழ்பவர்களின் குரலை எழுதியிருக்கிறேன்.குழந்தைகள் குதுகலங்களை இழந்து விட்டன .யுத்தம் வளர்ந்தவர்களை மட்டுமல்ல குழந்தைகளிலும் தன் விஷக்கால்களை ஊன்றிச் செல்கிறது.மிகக் கொடுமையான காலம் இது.
கனத்த நீள் மௌனமொன்றை மட்டும் விட்டுச்செல்ல முடிகிறது உங்கள் கவிதையை வாசித்தபின்பு.
2 அக்டோபர், 2008 அன்று AM 10:37அந்தவிடத்தில் இல்லாமற்போன குற்றவுணர்வை மட்டும் எப்படிக் கடந்துபோவதென்று தெரிவதில்லை..
கருத்துரையிடுக