சித்தாந்தன்
அநேகமும் நான் செல்லும் வீடுகள்
பூட்டியேயிருக்கின்றன
கதவுகளுக்குப் பின்னால் உதிர்ந்திருக்கும்
சம்பாஷனைகள்
கதவினைத் தட்டும்போது சிதறிக்கலைகின்றன
சில வீடுகளுக்குள்ளிருந்து
வீணையினதோ வயலினினதோ இசை
மாயமாய்க் கசிந்துகொண்டேயிருக்கின்றன
எல்லா வீடுகளின் முற்றங்களிலும்
காற்றில் உலராமலிருக்கின்றன பாதச்சுவடுகள்
அவசரத்தில் காலுதறிய செருப்புக்கள்
கலைந்துகிடக்கின்றன படிக்கட்டுகளில்
உட்புறமாகத் பூட்டப்பட்ட
கதவுகளின் அதிர்வொலி துக்கத்தை வரவழைக்கிறது
உடமையாளர்களைத் தொலைத்த
வீடுகளின் முன்
தனித்திருக்கின்றன திறப்புக்கோர்வைகள்
ஆயினும் அவை
கதவுகளுக்குப் பொருந்திவருவதில்லை
திறப்புத் துவாரத்தினூடு
கண் சொருகிப் பார்க்கையில்
எங்கிருந்தோ வந்துவிடுகிறது பதட்டம்
பலமுறையும்
என் வீட்டினுள்ளேயே பூட்டப்பட்டிருக்கின்றன
என்னுடையதான வீடுகள்
நன்றி - உயிர்நிழல்
Related Posts:
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அஞ்சலி
சிறுகதைகள்
விமர்சனங்கள்
தமருகம்
இணைப்புக்கள்
- ஃபஹீமாஜஹான்
- அ.முத்துலிங்கம்
- அகேனம்
- அஜந்தகுமார்
- அருண்மொழிவர்மன்
- எஸ்.ராமகிருஷ்ணன்
- எஸ்போஸ்
- கடற்கரய்
- கருணாகரன்
- கலாப்ப்ரியா
- குட்டி ரேவதி
- சஜிதரன்
- சுதேசம்
- ஜமாலன்
- ஜெயமோகன்
- டிசே தமிழன்
- தானா விஷ்ணு
- தீபம்
- துவாரகன்
- தேவ அபிரா
- நாகார்ஜூனா
- நாஞ்சில்நாடன்
- பெட்டை
- முரண்வெளி
- மெலிஞ்சி முத்தன்
- லீனா மணிமேகலை
- வண்ணதாசன்
- வண்ணநிலவன்
- ஷோபாசக்தி
- ஸ்மைல் வித்தியா
பகுதிகள்
- அறிமுகவுரை (1)
- எதிர்வினை (2)
- கட்டுரை (2)
- கடிதம் (1)
- கவிதைகள் (81)
- குறும்படம் (1)
- சஞ்சிகை அறிமுகம் (2)
- சிறுகதை (4)
- சினிமா (2)
- நினைவுக் குறிப்பு (1)
- நுால் அறிமுகம் (2)
- நேர்காணல்கள் (1)
- நேரும் எதிரும் (2)
- மாயத்திரை (3)
- முன்னுரைகள் (2)
- மொழியாக்கக் கவிதைகள் (2)
- விமர்சனங்கள் (3)
0 comments:
கருத்துரையிடுக