சந்நதம்
In கவிதைகள்16 ஜூன், 2010
சித்தாந்தன்
நிதானம் தப்பிய மழையின்
பேரிரைச்சலுடன் சந்நதம் நிகழ்கிறது
கோடுகளால் கிறுக்கப்பட்ட முகத்துடன்
உங்கள் முன் மண்டியிட்டிருக்கின்றேன்
சுடுகாட்டின் சாம்பல்
என்மீது படிந்திருக்கிறது
ஈனத்துடன் ஊர்ந்தூர்ந்து
கடலிலிருந்து கரையேறுகிறது
சிறு புழுவளவான சூரியன்
உங்கள் கனமேறிய கால்களின் ஒலி
விரட்டிச் சென்று குதறும்
என் தனிமைக்கு
காலபேதமும் ஜீவனுமில்லை
பயணவெளியின் காற்றில்
அச்சத்தின் பேருருவாக விழுந்து புலம்புகிறது
என் நண்பனின் ஒரு நூறு கவிதைகளிலும்
மிருகங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும்
நீங்கள்
அவனைக் கொன்று களித்திருந்த நாளில்
விலங்குகள் மாட்டப்பட்ட வார்த்தைகள்
காற்றில் சுழன்றடித்தன
எல்லாச் சந்நதங்களின் முடிவிலும்
காற்றின் ரகசியப் புலன்களில்
சீழ் கட்டி மணக்கும் மரணங்களின் வலி
பிறகு
மிக இயல்பான புன்னகையுடன்
தேநீர் பருகுவீர்கள்
கொலையுண்டவனின் கதறலையும் கெஞ்சலையும்
வேடிக்கைச் சொற்களால் பேசுவீர்கள்
கொலைக் கருவிகளின் முனைக்கத்திகளால்
குற்றப்பட்டிருக்கின்றன எமது வார்த்தைகள்
பனி பெய்தபடியிருக்கும் இந்த ராத்திரியில்
என் மூச்சில் அலைந்தசைகிற
இந்த கைவிளக்குச் சுடரினடியில்
கடவுளுக்காக என் கதறல்கள் முழுவதையும்
கொட்டிவைத்திருக்கிறேன்
என் கடவுளுக்காக
நன்றி- பொங்குதமிழ்
Related Posts:
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அஞ்சலி
சிறுகதைகள்
விமர்சனங்கள்
தமருகம்
இணைப்புக்கள்
- ஃபஹீமாஜஹான்
- அ.முத்துலிங்கம்
- அகேனம்
- அஜந்தகுமார்
- அருண்மொழிவர்மன்
- எஸ்.ராமகிருஷ்ணன்
- எஸ்போஸ்
- கடற்கரய்
- கருணாகரன்
- கலாப்ப்ரியா
- குட்டி ரேவதி
- சஜிதரன்
- சுதேசம்
- ஜமாலன்
- ஜெயமோகன்
- டிசே தமிழன்
- தானா விஷ்ணு
- தீபம்
- துவாரகன்
- தேவ அபிரா
- நாகார்ஜூனா
- நாஞ்சில்நாடன்
- பெட்டை
- முரண்வெளி
- மெலிஞ்சி முத்தன்
- லீனா மணிமேகலை
- வண்ணதாசன்
- வண்ணநிலவன்
- ஷோபாசக்தி
- ஸ்மைல் வித்தியா
பகுதிகள்
- அறிமுகவுரை (1)
- எதிர்வினை (2)
- கட்டுரை (2)
- கடிதம் (1)
- கவிதைகள் (81)
- குறும்படம் (1)
- சஞ்சிகை அறிமுகம் (2)
- சிறுகதை (4)
- சினிமா (2)
- நினைவுக் குறிப்பு (1)
- நுால் அறிமுகம் (2)
- நேர்காணல்கள் (1)
- நேரும் எதிரும் (2)
- மாயத்திரை (3)
- முன்னுரைகள் (2)
- மொழியாக்கக் கவிதைகள் (2)
- விமர்சனங்கள் (3)
0 comments:
கருத்துரையிடுக