செத்தவனின் விம்பமான நான்
In கவிதைகள்26 ஜூன், 2010
சித்தாந்தன்
நான் கனவு காணத் தொடங்கியிருக்கிறேன்
வானத்தின் நிழலாய்
எனது முகம் வியாபித்துக்கிடப்பதாய்
இந்தக் காற்றின் தொடுகையை
முறித்துவிட்டால் போதும்
மூச்சுக் குழாய்கள் வெடித்து
ஆசுவாசமாய் தூங்கிவிடலாம்
காலையின் ஒலிகளை
கவிதைகளாய் என்னிடம் விட்டுப்போகும்
பறவைகளுக்குத் தெரிவதில்லை
மாலைச் சூரியனின் அந்திம ஒளியில்
எனது மாபெரும் கவிதைகளிலும்
குருதி படிந்து போவதை
முகங்களின் உலகத்தில்
தனித்தலையும் எனது முகத்தை
புராதன மனிதச்சாயல் விழுந்திருப்பதாய்
நண்பன் ஒருவன் சொன்னான்
அப்போதே நம்பியிருக்க வேண்டும்
நான் செத்தவனின் விம்பம் என்பதை
தலைக்குப் பின்புறம்
வலியெடுத்து மூளையும் குழம்பி
சாவுக் கயிற்று வலையில்
எல்லாக் கற்பனைகளும் மொய்த்திருக்க
நிழலெனத் தொடரும்
காலவானத்தின் உச்சியிலிருந்து
சூரியன் சிரிக்கிறது
Related Posts:
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அஞ்சலி
சிறுகதைகள்
விமர்சனங்கள்
தமருகம்
இணைப்புக்கள்
- ஃபஹீமாஜஹான்
- அ.முத்துலிங்கம்
- அகேனம்
- அஜந்தகுமார்
- அருண்மொழிவர்மன்
- எஸ்.ராமகிருஷ்ணன்
- எஸ்போஸ்
- கடற்கரய்
- கருணாகரன்
- கலாப்ப்ரியா
- குட்டி ரேவதி
- சஜிதரன்
- சுதேசம்
- ஜமாலன்
- ஜெயமோகன்
- டிசே தமிழன்
- தானா விஷ்ணு
- தீபம்
- துவாரகன்
- தேவ அபிரா
- நாகார்ஜூனா
- நாஞ்சில்நாடன்
- பெட்டை
- முரண்வெளி
- மெலிஞ்சி முத்தன்
- லீனா மணிமேகலை
- வண்ணதாசன்
- வண்ணநிலவன்
- ஷோபாசக்தி
- ஸ்மைல் வித்தியா
பகுதிகள்
- அறிமுகவுரை (1)
- எதிர்வினை (2)
- கட்டுரை (2)
- கடிதம் (1)
- கவிதைகள் (81)
- குறும்படம் (1)
- சஞ்சிகை அறிமுகம் (2)
- சிறுகதை (4)
- சினிமா (2)
- நினைவுக் குறிப்பு (1)
- நுால் அறிமுகம் (2)
- நேர்காணல்கள் (1)
- நேரும் எதிரும் (2)
- மாயத்திரை (3)
- முன்னுரைகள் (2)
- மொழியாக்கக் கவிதைகள் (2)
- விமர்சனங்கள் (3)
0 comments:
கருத்துரையிடுக