சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

செத்தவனின் விம்பமான நான்

26 ஜூன், 2010


சித்தாந்தன்

நான் கனவு காணத் தொடங்கியிருக்கிறேன்
வானத்தின் நிழலாய்
எனது முகம் வியாபித்துக்கிடப்பதாய்

இந்தக் காற்றின் தொடுகையை
முறித்துவிட்டால் போதும்
மூச்சுக் குழாய்கள் வெடித்து
ஆசுவாசமாய் தூங்கிவிடலாம்

காலையின் ஒலிகளை
கவிதைகளாய் என்னிடம் விட்டுப்போகும்
பறவைகளுக்குத் தெரிவதில்லை
மாலைச் சூரியனின் அந்திம ஒளியில்
எனது மாபெரும் கவிதைகளிலும்
குருதி படிந்து போவதை

முகங்களின் உலகத்தில்
தனித்தலையும் எனது முகத்தை
புராதன மனிதச்சாயல் விழுந்திருப்பதாய்
நண்பன் ஒருவன் சொன்னான்
அப்போதே நம்பியிருக்க வேண்டும்
நான் செத்தவனின் விம்பம் என்பதை

தலைக்குப் பின்புறம்
வலியெடுத்து மூளையும் குழம்பி
சாவுக் கயிற்று வலையில்
எல்லாக் கற்பனைகளும் மொய்த்திருக்க
நிழலெனத் தொடரும்
காலவானத்தின் உச்சியிலிருந்து
சூரியன் சிரிக்கிறது

சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்