மண்சிலைகளை உடைத்துக்கொண்டிருக்கிறாய்
In கவிதைகள்11 ஜூலை, 2010
சித்தாந்தன்
பிரதிபலிப்புக்களின் கூடமான கலைவெளியில்
இப்போது நீ
யாரின் சிலையை உடைத்துக் கொண்டிருக்கிறாய்
சிறகுடைந்த தும்பியொன்றின்
அவலம் மிகும் குரல்
பெயர்ந்தலையும் மரங்களின் கீதமாய்
இன்னும் கேட்கின்றது
நீ மண்சிலைகளை
உடைத்துக் கொண்டேயிருக்கிறாய்
காலபேதம் மறந்த உன்கைகளில்
பிசுபிசுக்கும் இரத்தம்
எனது மண்சிலையினதாய் இருக்கலாமென
அஞ்சுகின்றேன்
சற்றும் அயராத உனதுடலில்
வழியும் வியர்வை
ஒரு நதியாக ஊரத்தொடங்கியிருக்கின்றது
மங்கியுதிரும் பொழுதில்
நீ இப்போது உடைக்கின்ற சிலை உன்னுடையது
பிசுபிசுக்கும் இரத்தமும் உன்னுடையது
ஆனாலும்
கதறியழுதபடி உடைத்தபடியிருக்கிறாய்
கால்களின் கீழ்
உதிர்ந்திருக்கும் உனதுடலின் மண்துகழ்களை
அள்ளிச் செல்லும் யாரோ ஒருவன்
செய்யத் தொடங்கியிருக்கின்றான்
யாரோ எவரினதோ பிரதிபலிப்பான
மண்சிலையை
Related Posts:
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அஞ்சலி
சிறுகதைகள்
விமர்சனங்கள்
தமருகம்
இணைப்புக்கள்
- ஃபஹீமாஜஹான்
- அ.முத்துலிங்கம்
- அகேனம்
- அஜந்தகுமார்
- அருண்மொழிவர்மன்
- எஸ்.ராமகிருஷ்ணன்
- எஸ்போஸ்
- கடற்கரய்
- கருணாகரன்
- கலாப்ப்ரியா
- குட்டி ரேவதி
- சஜிதரன்
- சுதேசம்
- ஜமாலன்
- ஜெயமோகன்
- டிசே தமிழன்
- தானா விஷ்ணு
- தீபம்
- துவாரகன்
- தேவ அபிரா
- நாகார்ஜூனா
- நாஞ்சில்நாடன்
- பெட்டை
- முரண்வெளி
- மெலிஞ்சி முத்தன்
- லீனா மணிமேகலை
- வண்ணதாசன்
- வண்ணநிலவன்
- ஷோபாசக்தி
- ஸ்மைல் வித்தியா
பகுதிகள்
- அறிமுகவுரை (1)
- எதிர்வினை (2)
- கட்டுரை (2)
- கடிதம் (1)
- கவிதைகள் (81)
- குறும்படம் (1)
- சஞ்சிகை அறிமுகம் (2)
- சிறுகதை (4)
- சினிமா (2)
- நினைவுக் குறிப்பு (1)
- நுால் அறிமுகம் (2)
- நேர்காணல்கள் (1)
- நேரும் எதிரும் (2)
- மாயத்திரை (3)
- முன்னுரைகள் (2)
- மொழியாக்கக் கவிதைகள் (2)
- விமர்சனங்கள் (2)
0 comments:
கருத்துரையிடுக