சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

சாவுகளால் நிரம்பும் வெளி

14 மே, 2011

சித்தாந்தன்

மரங்களில் பூத்திருக்கின்றன
பிணப் பூக்கள்.
வெளிவந்த அறிக்கைகளின் பின்னால்
தேகத்தை பெற்றோலுக்கிரையாக்கியவனின் கதறல்
ஓலிக்கிறது.

நீள்வானத்தின் பெருநட்சத்திரங்கள் உடைந்து சிதறியபின்
தியாகங்களைக் கூவி விற்பவர்கள்
தெருக்களில் சாவகாசமாய் அலைகிறார்கள்.

சித்தம் சிதறிய தாயே சொல்
உன் வானம் பற்றிய கனவில்
இன்னும் நீலம் உலராமல் இருக்கின்றதா?

சாவுகளின் சாகசத் தனங்களை
அவற்றின் நித்தியத்தை
அறைந்தவர்களின் குரல்களின் பின்னால் மேலெழுந்த
புழுதியில்
ஏப்போதாவது கண்டிருக்கிறாயா?
உன் பாலகனின் பிஞ்சு முகத்தை.

இன்றோ
இன்னொரு பாலகன்
தன்னுடலைத் தீயுண்ணக் கொடுத்துத் தியாகியாகிவிட்டான்

கல்லறைகளைக் கிளறி
அவற்றின்மேலாய்
கட்டிடங்கள் வளர்ந்துவிட்டன.

காற்றைக் கைகளால் அளையும் குழந்தைகள்
இன்று அதன் மௌனத்தைக் கண்டு கதறுகிறார்கள்.

இன்னும் இன்னுமாக
தியாகங்களால் சாவின் வெற்றிடத்தை நிரப்ப
காத்திருக்கிறார்கள் பாலகர்கள்

சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்