சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

மகா ஜனங்களின் அழுகை அல்லது அரசர்களின் காலம்

15 ஜூன், 2008

சித்தாந்தன்
----------------------------------------------------------

மகா ஜனங்கள் அழுதார்கள்
அரசின்
தூசி படர்ந்த சப்பாத்துக்களின் கீழே
ஆயிரமாயிரம் கபாலங்கள்

அனோஜ்
எனது அழகிய சின்னஞ்சிறு நண்பியே
வெண்கொற்றக்குடை
சிம்மாசனம்
ஆயுதங்கள்
படைவீரர்கள் என எல்லாமே அரசர்களுடையன
எனக்கென்றோ
உனக்கென்றோ எதுவுமேயில்லை

அரசர்கள் வருவார்கள் போவார்கள்
ஒரு அரசன் விட்ட இடத்திலிருந்து
மற்ற அரசன் தொடங்குவான்

இது அரசர்களின் காலம்
மகா ஜனங்களின் கண்ணீர் எவர்க்கு வேண்டும்

அனோஜ்
கனவுகளின் வர்ணங்களால் வாழ்க்கையை வரையாதே
நம்பிக்கையீனங்களின் காலமாகிறது நமது காலம்
நம்பிக்கை தரக்கூடிய
எந்த வார்த்தையும் என்னிடமில்லை

உனது தூக்கங்களில்
துவக்கு மனிதர்கள் வந்து
அச்சமூட்டுவதாய் அழுகிறாய்

இவை
யுத்தத்தினுடைய நாட்கள்
நாட்களை மகாஜனங்கள்
யுத்தத்திற்கு பரிசளித்திருக்கிறார்கள்
நீ
தெளிவாக இருந்தால் போதும்
எல்லலாமே அரசர்களுடையன

உனக்கும் எனக்கும் மரநிழல்கள் போதும்
நிலவின் ஒளிபோதும்
நாம் புலம்பித்திரிய வேண்டாம்

இன்னும் நான் நம்புகிறேன்
எங்களது கண்ணீர் மிகவும் வலிமையானது

அரசர்களுக்கு துப்பாக்கிகளைப்பற்றியும்
பீரங்கிகளைப்பற்றியுமே அதிகமாகத் தெரியும்
மகாஜனங்களின் அழுகைகளையோ
துயரம் முற்றிய முகங்களையோ
அவர்கள் அறிந்ததில்லை

நீ இடப்பெயர்வுகளில் தவறிய
பொம்மைகளுக்காக அழுதாய்
அவை உனது பொம்மைகள்
நீ யாருமற்ற பொழுதுகளில்
அவற்றுடன் பேசியிருக்கலாம்
அவற்றிற்கு கற்பித்திருக்கலாம்

நான் அவற்றை பொம்மைகளென்பது
உனக்கு எரிச்சலூட்டும்
அனோஜ்
நான் அறிவேன்
இவை உனது நண்பர்களாயிருந்தன
நீ எனக்கிருப்பது போலவே

நாம் கலங்கத்தேவையில்லை

யுத்தம் எமக்கு பழக்கப்பட்டதாயிற்று
கண்ணீர்
குருதி
துயரம்
மகாஜனங்களின் மொழிகளாகிவிட்டன
சமாதானம் பற்றியெல்லாம்
தெருக்களில் பேச்செழுகிறது
நான் சமாதானம் பற்றியறியேன்

அது ஒரு கனியா
அது ஒரு மலரா
அது ஒரு பறவையா
அது ஒரு நட்சத்திரமா
யாரிடம் கேட்டறிய முடியும்
இல்லை
வெறும் வார்த்தை மட்டுந்தானா

மகா ஜனங்கள்
வார்த்தைகளை நம்பிப்பழகிவிட்டார்கள்

தெருக்களில் அலைகின்றன
எல்லா நாட்களிலும்
நம்பிக்கையூட்டலுக்குரிய வார்த்தைகள்

அனோஜ்
வார்த்தைகளை நம்பாதே

2002
-----------------------------------------

சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்