சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

துர்நிமித்தம்-1

19 மே, 2011

சித்தாந்தன்

இந்த இரவை
பனியின் திவலைகளால் மூடுகின்றேன்.
சாத்தப்படாத யன்னலுக்கு அப்பால்
தொலைவில் மங்கும் வெளிச்சத்தில்
கருகி மணக்கிறது யாருடையதோவான தேகங்கள்

இலைகளையுண்ணும் இரவு இன்னும்
நட்சத்திர இழைகளில்த்தான் தொங்குகிறது

பின்னிரவின் சூட்சுமம் புரியாத பைத்தியக்காரன்
இரவைக் கவிதையென கத்தித் திரிகின்றான்

தேகங்கள் எரிந்து கருகட்டும்

யன்னலின் அண்டை வந்து
கம்பிகளில் மோதித் திரும்புகின்ற காற்றுக்கு
காவித்திரிய நறுமணம் இல்லாத கவலை

புணர் ஜென்மங்களை நினைவுறுத்தும் படியாக
சாவின் நிழல் பரத்தியபடி மேலெழுகிறது சூரியன்
அதே திமிர்த்தனத்துடன்.

காலங்கள் நெக்கியுதிர்ந்த யன்னலருகே
யாருமேயில்லை
காற்றுக் கூட.

சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்