சித்தாந்தன்
----------------------------------------------------------
துயர்ப் பயணக்குறிப்புகள் 1
நான் யுகங்களின் முடிவிலிருந்து
திரும்பி வந்திருக்கிறேன்
எறும்பூரும் பாதைகளும்
வனாந்திரங்களின் ஒலிகளுமற்றதில்லை
எனது வழித்தடங்கள்
இறுகிய முகங்களின் சர்வகாலத்தினதும்
புகைமண்டிய புன்னகைகளை
எனக்காக விட்டுச்சென்ற
எல்லோரையும் நானறிவேன்
இடியதிர்வின் மின்னல் ஒளியில்
பாதியான என் பாலிய பிராயத்தை
காடுகளின் இலையுறுமல்களுக்கிடையில்
தவற விட்டுவிட்டேன்
குறிகளும் முகங்களுமில்லாத
ஆயிரமாயிரம் மனிதர்களுக்கிடையில்
நான் திரும்பி வருவேனென
யாரும் நினைத்திருக்க முடியாது
நான் வந்தேன்
மௌனகாலத்தில் மிதந்த கடல்
முதல் முறை அலையெழுப்பிற்று
வானத்திற்கு அப்பாலான வெளியிலும்
நான் அதைக்கேட்டேன்
கிரகங்களின் ஒளிமுகங்களிலும்
எனது புன்னகை ஒட்டிக்கிடந்தது
தூக்கு மேடைகளும் கயிறுகளும்
நிறைந்த பொழுதுகளில்
ஒரு அந்நியனின் பார்வையழிந்து
இன்னொரு அந்நியன்
தெருக்களில் உலாவந்த நாட்களில்
நான் தெருக்களில் வதைபட்டேன்
உங்களில் எவருமே தெருவுக்கு வரவில்லை
இன்று நான் வந்தேன்
பிரபஞ்சத்தின் கடைசியிரண்டு
கண்ணீர்த்துளிகளும் காய்ந்துபோன பிறகு
நான் வந்தேன்
தெருவில் சயணித்த மனிதர்களின்
ஆழ்ந்த உறக்கத்தின் அலறல்களில்
நான் கழுத்தைத் திருகியெறிந்த
கனவுகளுடன் வந்தேன்
ஆனால்
இன்னும் நீங்கள் தெருக்களுக்கு வரவில்லை
இலைச்சஞ்சாரம்
காற்றில் இல்லாமலே போய்விட்டது
நானே தெருக்களில் அலைகிறேன்
நான் மட்டும் ஒருவனாக
தனி ஒருவனாக
துயர்ப் பயணக்குறிப்புகள் 2
நண்பனே
சர்வசாதாரணமாக வார்த்தைகளை
உதிர்க்கப்பழகிவிட்டாய்
மொழி தெரியாத ஒரு நகரத்தில்
நான் ஒரு பித்தனாய்த் திரிந்தேன்
வாகனங்களின் நெரிசலுள்ளும்
மனித இடிபாடுகளிலுள்ளும்
வெறும் அலங்கார ஒளிர்வுகளிலுள்ளும்
எனது குரலை மறைத்தபடி திரிந்தேன்
உனது வார்த்தைகளை
இயல்பானதென நீ வாதாடுகிறாய்
நான் வார்த்தைகளை காற்றிலே விட்டெறியாமல்
மிக அவதானமாக உன்னைப் பார்த்தேன்
எந்த இயல்பும் நிரந்தரமானதில்லை
இயல்பில்லாமலும் போய்விடும்
நீ அவதானமாக இருக்க வேண்டும்
உன் இயல்புகளை
இந்த நகரம் பிடுங்கி எடுத்துவிடும்
இந்த வீதிகளில் இயல்பில்லை
கணங்கள் தோறும் இதன் இயல்புகள்
உடைந்து நொருங்குகின்றன
இதனையும்
நீ இயல்பெனக்கருதலாம்
அது நல்லது
ஒரு சிறிய இடைவெளி கொடு
நான் வெளியேறி விடுகிறேன்
தேநீர்க் கடைகளையும்
புத்தகக் கடைகளையும்
நினைவில் வைத்துக்கொள்கிறேன்
என்னைப்போலவே
இன்னும் சில மனிதர்களும்
இங்கு அலைவுறலாம்
பஸ் இலக்கங்களை மறந்துபோய்
அவர்களுக்குத் தெரிந்த
தொலைபேசி இலக்கஙகளைத் தவறவிட்டு
அலையலாம்
இங்கு வாழப்பழகிவிட்ட
வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட
எல்லா மனிதர்களுக்கும்
எனது அனுதாபங்கள்
நண்பனே
எந்த இயல்பும் நிரந்தரமில்லை
இயல்பில்லாமலும் போய்விடும்
---------------------------------------------------------------
Related Posts:
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அஞ்சலி
சிறுகதைகள்
விமர்சனங்கள்
தமருகம்
இணைப்புக்கள்
- ஃபஹீமாஜஹான்
- அ.முத்துலிங்கம்
- அகேனம்
- அஜந்தகுமார்
- அருண்மொழிவர்மன்
- எஸ்.ராமகிருஷ்ணன்
- எஸ்போஸ்
- கடற்கரய்
- கருணாகரன்
- கலாப்ப்ரியா
- குட்டி ரேவதி
- சஜிதரன்
- சுதேசம்
- ஜமாலன்
- ஜெயமோகன்
- டிசே தமிழன்
- தானா விஷ்ணு
- தீபம்
- துவாரகன்
- தேவ அபிரா
- நாகார்ஜூனா
- நாஞ்சில்நாடன்
- பெட்டை
- முரண்வெளி
- மெலிஞ்சி முத்தன்
- லீனா மணிமேகலை
- வண்ணதாசன்
- வண்ணநிலவன்
- ஷோபாசக்தி
- ஸ்மைல் வித்தியா
பகுதிகள்
- அறிமுகவுரை (1)
- எதிர்வினை (2)
- கட்டுரை (2)
- கடிதம் (1)
- கவிதைகள் (81)
- குறும்படம் (1)
- சஞ்சிகை அறிமுகம் (2)
- சிறுகதை (4)
- சினிமா (2)
- நினைவுக் குறிப்பு (1)
- நுால் அறிமுகம் (2)
- நேர்காணல்கள் (1)
- நேரும் எதிரும் (2)
- மாயத்திரை (3)
- முன்னுரைகள் (2)
- மொழியாக்கக் கவிதைகள் (2)
- விமர்சனங்கள் (3)
வலைப்பதிவுக் காப்பகம்
-
►
2011
(19)
- ► செப்டம்பர் (2)
-
►
2010
(22)
- ► செப்டம்பர் (1)
-
►
2009
(12)
- ► செப்டம்பர் (3)
-
▼
2008
(29)
- ► செப்டம்பர் (2)
-
▼
ஜூன்
(10)
- பிடாரனின் திகைப்பூட்டும் கனவுகளிலிருந்து நான் தப்ப...
- நகரத்திற்கு வந்தவனின் இரண்டு கவிதைகள்
- மகா ஜனங்களின் அழுகை அல்லது அரசர்களின் காலம்
- உரையாடலில் தவறிய சொற்கள்
- எரிதலின் வலி
- தருணம்/2
- கருணை வேண்டிக் காத்திருத்தல்
- தருணம்/1
- காற்றில் இசைப்பவனின் கனவு இசை
- சந்திரபோஸ் சுதாகர் எரிந்து கொண்டிருக்கும் காலத்தின...
2 comments:
சித்தாந்தன்
26 ஜூலை, 2008 அன்று AM 9:26யுத்தம் எல்லாவற்றையும் சிதைத்துள்ளது.துயரங்களையும் அவலங்களையும் காவித்திரியும் மனிதர்களை தெருக்களில் விட்டுச் சென்றுள்ளது.
நம்பிக்கைதரும் விடயங்கள் எதுவும் இல்லை உங்களைப் போலவே எங்களிடமும்.
என்ன செய்வது?
பஹீமா
2 ஆகஸ்ட், 2008 அன்று AM 12:09எல்லாவற்றையும் எழுதும் மனநிலை
இப்போது இருக்கின்றது.எமது வாழிடம் மூடுண்டுள்ளது
வாழ்வு பற்றிய நம்பிக்கையீனங்களுடன் மனிதர்கள் nலைகிறார்கள் நம்பிக்கையீனங்களின் கவிதையாகத்தான் எனது கவிதைகள் இருக்கின்றன
உங்கள் கருத்துக்கள் என்னை மேலும் வலுப்படுத்துகின்றன.
நன்றி
கருத்துரையிடுக