சித்தாந்தான்
................................................................
ஒரு குழலின் ஆழத்துள் இறங்கும் குருதி
இசையை மூழ்கடிக்கிறது
அதன் கதவுகளை மூடி
சுரங்களை இருளடையச் செய்கிறது
பூர்வத்தின் அதிபுனைவுக் கதைகளை
இசையாக வாசிப்பவர்கள்
பிணங்களைப் புணருகிறார்கள்
நிணத்தைப் பருகுகிறார்கள்
மலத்தைச் சுற்றும் ஈக்களாய் இரைகிறார்கள்
உண்மையிலவர்கள்
காற்றின் நறுமணத்தை முகர்வதில்லை
நண்பனே
இலைகளாயும் கனிகளாயும்
உதிர்ந்துள்ள
உன்னையும் என்னையும் பற்றி
இசையின் துளியாக யாரும் பேசவில்லை
மலைகளில் உறைந்திருக்கிறது சரித்திரம்
சூரியனோ
பல நூறு பிணங்களாய்ச் சிதறிக்கிடக்கிறது
நம்மில் யார்
காலப் பிரக்ஞை ஊறிய முதிர்சுவடுகளின்
ஆழ்வேர்ச் சுனையைத் திறப்பது
ஒரு சொட்டுக் கண்ணீரை வியர்வையை
ஒரு வேளை உணவை பாதைகளை
குழந்தைகளுக்கான தாலாட்டை
நிலாவெழும் வானத்தை
விதியென முள்வலைக்கு இரையாக்கிவிட்டு
மறுக்கப்பட்ட சொற்களின் வலியறியாது
மனிதர்கள் அலைகிறார்கள்
நண்பனே
கடவுளின் பானத்தில் சிதறிய துளியை
அவரின் உணவின் பருக்கையை
நீயோ நானோ உண்ணவில்லையாயினும்
சரித்திரம் உண்மையைத் தின்றுவிட்டது
வானம் விரியும் மையத்தில்
அலகு குத்தும் பறவை
சரித்திரத்தைக் குருதியென உறிஞ்சுகிறது
தாழாத சிறகுகளினால் தன் ஒலியை எழுப்புகிறது
நன்றி-எதுவரை (பெப்- மார்ச் 2010)
Related Posts:
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அஞ்சலி
சிறுகதைகள்
விமர்சனங்கள்
தமருகம்
இணைப்புக்கள்
- ஃபஹீமாஜஹான்
- அ.முத்துலிங்கம்
- அகேனம்
- அஜந்தகுமார்
- அருண்மொழிவர்மன்
- எஸ்.ராமகிருஷ்ணன்
- எஸ்போஸ்
- கடற்கரய்
- கருணாகரன்
- கலாப்ப்ரியா
- குட்டி ரேவதி
- சஜிதரன்
- சுதேசம்
- ஜமாலன்
- ஜெயமோகன்
- டிசே தமிழன்
- தானா விஷ்ணு
- தீபம்
- துவாரகன்
- தேவ அபிரா
- நாகார்ஜூனா
- நாஞ்சில்நாடன்
- பெட்டை
- முரண்வெளி
- மெலிஞ்சி முத்தன்
- லீனா மணிமேகலை
- வண்ணதாசன்
- வண்ணநிலவன்
- ஷோபாசக்தி
- ஸ்மைல் வித்தியா
பகுதிகள்
- அறிமுகவுரை (1)
- எதிர்வினை (2)
- கட்டுரை (2)
- கடிதம் (1)
- கவிதைகள் (81)
- குறும்படம் (1)
- சஞ்சிகை அறிமுகம் (2)
- சிறுகதை (4)
- சினிமா (2)
- நினைவுக் குறிப்பு (1)
- நுால் அறிமுகம் (2)
- நேர்காணல்கள் (1)
- நேரும் எதிரும் (2)
- மாயத்திரை (3)
- முன்னுரைகள் (2)
- மொழியாக்கக் கவிதைகள் (2)
- விமர்சனங்கள் (3)
2 comments:
vasiththean.
15 மார்ச், 2010 அன்று AM 11:33thodarunkal.
www.maatrupirathi.tk
வருகைக்கு நன்றி றியாஸ்
16 மார்ச், 2010 அன்று AM 8:42கருத்துரையிடுக