சித்தாந்தன்
மீந்திருக்கும் சொற்களையும்
மௌனம் தின்று தொலைக்கிறது
ஈரம் கசியும் பால் வெளியில்
இன்னும் பறந்தபடியிருக்கின்றன
இரண்டு பட்டங்கள்
காற்றின் அசைவுகளில் சூழன்று
எதிர்பாராத தருணங்களில்
ஒன்றையொன்று முத்தமிடுகின்றன
பாலையாய் எரிகிறது பகல்
புறக்கணிப்பின் உச்சப் பொழுதுகளில்
மணிக்கட்டில் ஊருகிற எறும்பைத்
தட்டுவதைப் போலாகிறது அன்பூறும் கணங்கள்
மோகித்துச் சுடரும் வானத்தின் கீழ்
நிலவைப் புசிக்கிறது இரவு
மூச்சின் அனல் எறிக்கும் தூரம் கூட இல்லை
பாதைகள் தூர்ந்து போயின
சுனைகள் வற்றிவிட்டன
பிணைப்பு நூலின் கடைசி இழையில்
விரல்கள் ஊசலிடுகின்றன
எது மீதமாயிருக்கிறது
நீயும் நானும் பருக
Related Posts:
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அஞ்சலி
சிறுகதைகள்
விமர்சனங்கள்
தமருகம்
இணைப்புக்கள்
- ஃபஹீமாஜஹான்
- அ.முத்துலிங்கம்
- அகேனம்
- அஜந்தகுமார்
- அருண்மொழிவர்மன்
- எஸ்.ராமகிருஷ்ணன்
- எஸ்போஸ்
- கடற்கரய்
- கருணாகரன்
- கலாப்ப்ரியா
- குட்டி ரேவதி
- சஜிதரன்
- சுதேசம்
- ஜமாலன்
- ஜெயமோகன்
- டிசே தமிழன்
- தானா விஷ்ணு
- தீபம்
- துவாரகன்
- தேவ அபிரா
- நாகார்ஜூனா
- நாஞ்சில்நாடன்
- பெட்டை
- முரண்வெளி
- மெலிஞ்சி முத்தன்
- லீனா மணிமேகலை
- வண்ணதாசன்
- வண்ணநிலவன்
- ஷோபாசக்தி
- ஸ்மைல் வித்தியா
பகுதிகள்
- அறிமுகவுரை (1)
- எதிர்வினை (2)
- கட்டுரை (2)
- கடிதம் (1)
- கவிதைகள் (81)
- குறும்படம் (1)
- சஞ்சிகை அறிமுகம் (2)
- சிறுகதை (4)
- சினிமா (2)
- நினைவுக் குறிப்பு (1)
- நுால் அறிமுகம் (2)
- நேர்காணல்கள் (1)
- நேரும் எதிரும் (2)
- மாயத்திரை (3)
- முன்னுரைகள் (2)
- மொழியாக்கக் கவிதைகள் (2)
- விமர்சனங்கள் (3)
0 comments:
கருத்துரையிடுக