சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

மாயத் திரைகளில் வரைபடம் -2

18 டிசம்பர், 2008

எனது இறந்தகால அல்பம்
...........................................................................
சித்தாந்தன்

உங்களிடமிருந்து என்னால் எதையும் மறைக்க முடியாது. ஒரு பிணத்தை எப்படி மறைத்து வைக்க முடியும்? என் அல்பம் முழுமையும் பிணங்கள்தான் நிறைந்திருக்கின்றன. இரவுகளால் வஞ்சிக்கப்பட்டவர்களின் தெருக்களில் தொலைந்து போனவர்களின் அடையாள அட்டைகளில் முகம் மாறிப்போனவர்களின் அல்பம் என்னுடையது. எனது அல்பத்தை தெருக்களில் விரித்து வைத்திருக்கிறேன். யாருமே ஏறெடுத்துப்பார்ப்பதில்லை. எல்லோருமே இறந்த காலத்தின் பிணங்கள்தான். பிணங்களின் அல்பங்களை பிணங்கள் பார்ப்பதுமில்லை.அல்பங்களின் வர்ணங்களைப்பற்றி வளர்ந்து வரும் கதைகளை வாசித்துக் கொண்டிருந்த ஆதிக் குரங்கிடம் நான் கேட்டேன் வர்ணங்களின் கதைகளை

ஆதிக்குரங்கு சொன்ன அல்பங்களின் கதை

ஆதியில் அல்பங்களிருந்தன. முகத்திரையிடப்படாத அல்பங்கள விலங்குகளின் அல்பங்கள் ஒன்றும் மனிதர்களின் அல்பங்களிலிருந்து மாறுபட்டவையல்ல. விலங்குகள் மனிதர்களிடமிருந்து அந்நியப்பட்ட நாட்களில் அல்பங்களை ஆக்கத் தொடங்கின. விலங்குகளில் முதலாவது அல்பம் என்னுடையது. நான் எனது அல்பத்தின் முதலாவது படத்தை குகைச்சுவரில் வரைந்தேன். இலைகளாலும் தழைகளாலும் அதற்கு வர்ணங்கள் பூசினேன்.இப்படித்தான் தொடங்கியது வர்ணங்களின் கதை.மனிதர்கள் காடுகளிலிருந்து வெளியேறத் தொடங்கிய பின்னர் எனது முகத்தின் சாயலை அவர்கள் இழக்காத போதும் நிமிர்ந்து நடக்கத்தொடங்கினர். கத்திகளையும் கூரிய கற்களையும் அவர்கள் கைவிடவில்லை. முன்னர் எம்மை வேட்டையாட அவற்றைப் பாவித்தவர்களின் பழக்க தோசம் மாறாததால் தங்களிடையே சண்டையிடத் தொடங்கினர். விலங்குகளின் அல்பங்களை விடவும் மனிதர்களின் அல்பங்களில் இரத்தக் காயங்கள் அதிகம்.எனது அல்பத்தில் நதிகள் வற்றி விட்டன மலைகள் கரையத் தொடங்கிவிட்டன காடுகளின் நிலக்காட்சிகளில் விலங்குகள் பற்றிய கதைகளை வெறும் என்புகளாக மனிதர்கள் வாசிக்கின்றார்கள்.காடுகளுக்குள் யுத்தம் வந்துவிட்டது நிலங்களைப் போல காடுகளையும் யுத்த டாங்கிகள் உழுகின்றன.எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கின்றன் காடுகள் எரிகின்றன. பசுமை போர்த்திய மரங்களில் போர் உறைந்துபோயிற்று. மிருகங்களைப் போர் துரத்துகின்றது. காடுகள் அழகையிழந்து விட்டன. ஆதிக்குரங்கு தன் அல்பங்களில் வற்றிப்போன நதிகளை தேடிக் கொண்டிருக்கிறது.

இசையாய் மிதக்கும் பூனைக்குரல்

10 டிசம்பர், 2008

சித்தாந்தன்
........................................................................


சிறகுகளற்ற வெளியில் உரையாடிக்கொண்டிருந்தோம்

வீட்டின் வரைபடம் மறந்துபோன

அந்த இளமாலையில்

எமக்கிடையில் சரிந்துகிடந்த சிலுவையில்

எங்கள் கபாலங்கள் அறையப்பட்டுக்கிடந்தன


நாம் பரிமாறாத சொற்கள்

மதுக்குவளைகளில் பனிக்கட்டிகளாய் மிதந்தன

நீ உள்ளிளுத்து ஊதிய சிகரட் புகையில்

கருகிப்போன இதயத்தின் நாற்றமடித்தது


நீ கூச்சலிட்டாய்

சூரியன் பல்லாயிரம் துண்டுகளாய் உடைந்தது

அவசரங்களைக்களைந்து நாம் வந்திருந்த

அந்தப்பொழுதை நான் மௌனத்தால் அடைத்தேன்


நீ சொல்லிக்கொண்டிருந்தாய்

நடு வீட்டின் மையத்தில் தனித்தழும்

குழந்தையின் பூனைக்குரல்

எமது இசைப்பாடல்களில் வழிந்தொழுகுவதாய்


மதுவருந்திக் கழித்த அந்தமாலை

அடர்த்தியான கருமை கொண்டது

ஆயினும்வானம் நிர்வாணமாகவேயிருந்தது

எமது துயரிசையிலிருந்து இறங்கிய பூனை

எஞ்சிய மதுவையும் பருகிப் பாடத் தொடங்கியபோது

நாம் குழந்தைகளாயினோம்


துயரிசையின் உச்ச நொடியில்

ஒரு மாலையின் நிலவுருவை

வெறுமையாகிய மதுக்குவளைகளினடியில் கண்டடோம்

அக்கணம்

சூரியனுக்குக் கீழே நாங்களிருக்கவில்லை

எம் நிழல்கள்தான் நீண்டுகிடந்தன

சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்