சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

மகள்

18 அக்டோபர், 2011


(Multiple selerosis நோயால் வருந்தும் சபிதாவுக்கு)

மலையாள மூலம், ஆங்கிலத்தில்- k. சச்சிதானந்தன்

தமிழில்- சித்தாந்தன்


எனது முப்பது வயது மகளை

மீண்டும் ஆறுமாதக் குழந்தையாய்ப் பார்க்கின்றேன்

அவளை நீராட்டுகிறேன்.

முப்பது வருடத்து

துhசிகளையும் அழுக்குகளையும் கழுவுகின்றேன்.


அவள் இப்பொழுது

ஒளிவிடும் சிறிய அமிச்சைக் கவிதையாய்

சுவர்க்கத்தின் திரவமெனச் சுடருகிறாள்.

சிறிய துவாய்

காலத்தின் ஈரத்தால் நனைகிறது.


பீதோவன்

மேலான தன் மனிதக் கரங்களால்

யன்னல் கம்பிகளை

பியானோ இசைக் குறிப்புகளாக மாற்றுகின்றான்.


எனது மகள்

சிம்பொனி இசையிலிருந்து

தன் மென்மையான றோசாக் கரங்களால்

என்னைத் தழுவ எழுந்து வருகிறாள்.


வெளியே பிஹாக் இசையாய் மழை

கிசோறி அமொன்கர்.

துண்டிக்கப்படும் உரையாடல்கள்

09 அக்டோபர், 2011



செவிகளின் கூர்மை மங்கத்தொடங்கிய பிறகு
நீ கூவியழைக்கத் தொடங்கினாய்

இளஞ்சிவப்பு மலர்ச் செடிகளில்
கள்ளிமுட்கள் மலருகையில்
அதை அற்புதமென பறைசாற்றினாய்

இப்போதெல்லாம்
நகக்கணுக்களவு சுருங்கிய வார்த்தைகளோடு
எதிர்ப்படுகையில் புன்னகை மட்டும்
நிலாவிலிருந்து வடிகிறது ஒளியாய்

மமதையில் முறுக்கேறிய உனது சொற்களை
நகைத்திடமுடியாமலும்
புறங்கையால் விலக்கிடமுடியாமலும்
மணிக்கட்டின் கடிகாரம் மவுனமாய்க் கரைகிறது

எதையெதைச் சொல்லி உரித்தெறிய கணங்களை

அம்மணமாய் அலையும் சிறுவனின்
சலனமற்ற முகத்தை
பல தடவையும் பொருத்த வேண்டியிருக்கின்றது


எறும்புகளின் இரையாய்
என் சரீரத்தைத் தின்று மெல்லும்
இந்த யுகம் போகட்டும்

வேறென்ன
தோழமையின் நித்தியத்தை
பாசாங்காய் அறிவிக்கும் காலைகளின் ஆரவாரத்தை
‘சூ’ வெனத் துரத்தவியலாது
உள்ளங்கைகளிரண்டிலும் இரையும் கடல்கள்

மறுபாதி இதழ்-06

04 அக்டோபர், 2011

கவிதைக்கான இதழ்


வைகாசி-ஆவணி 2011


கவிதைகள்


அ.கேதீஸ்வரன்

ந.சத்தியபாலன்

பா.அகிலன்

எம்.ரிஷான் ஷெரீப்

எல்.வஸீம் அக்ரம்

யோகி

தானா விஷ்ணு

சி.ஜெயசங்கர்


மொழிக்கக் கவிதைகள்


கே. சச்சிதானந்தன்

-சித்தாந்தன்

சஜீவனி கஸ்துரி ஆரச்சி

- எம்.ரிஷான் ஷெரீப்

பற்றோமா

- தானா விஷ்ணு

சர்வேஷ்வர் தயாள் சக்ஸெனா

-சோ.பத்மநாதன்


கட்டுரைகள்


மொழி கலையாகும் தருணங்கள்

-ந.சத்தியபாலன்

மறுபாதி இதழ்-05 ஒரு வாசகன் பார்வையில்

-சாந்தன்

எதற்காகக் கவிதை

-கருணாகரன்


பத்தி


திவ்வியா


பதிவுகள்


கவிதை அறிமுகமும் கலந்துரையாடலும்-ஒரு குறிப்பு

-பா.துவாரகன்

மறுபாதி இதழ் 05 வெளியீடும் உரையாடலும்

-தீபச்செல்வன்


புத்தக அறிமுகம்


அனுபவங்களின் அர்த்தங்களால் நிறையும் வெளி

ரவிக்குமாரின் “மழைமரம்கவிதைத் தொகுப்பை முன்வைத்து

-சி.ரமேஷ்


எதிர்வினை


மொழி பெயர்ப்புப் பற்றி ஒரு மறுப்புரை

-சி.சிவசேகரம்


அஞ்சலி


ஏ.ஜி.எம் ஸதக்கா

சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்