சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

ஆத்மாநாம்

15 செப்டம்பர், 2010

கொலைக்கும் தற்கொலைக்குமிடையில் உதிரும் சொற்கள்

சித்தாந்தன்

இன்றென் குற்றவுணர்ச்சியை
உன்னுடன் பகிர்ந்து கொண்டேன்
அது நோயினால் துயருறும் குழந்தையாய்
உன் கைகளிற் துடித்தது

நீ அதிர்ந்துதான் போனாய்

அன்பின் சுனையைப் பருகாத
ஒரு மிருகம் நான் என்றாய்
என் புலன்களை மூடி மலைகள்
வளர்ந்ததாய்ச் சொன்னாய்

இதோ பார் என் கைகளை
பழியுணர்ச்சியின் தடையங்களில்லை
கொலை வெறியின் மிரட்டும் பார்வைகளில்லை

நான் கனவுகளின் எல்லைகளுக்கப்பால்
வீழ்ந்துகிடக்கவே விரும்புகின்றேன்

ஆத்மாநாம்
உன் சுய கொலைக் குறிப்பை
காற்றிடம் நீ கையளித்திருக்கலாம்
மரணம்
மாயத் தொட்டியில் மீனாய் அலைகின்றது

கொலைக்கும் தற்கொலைக்குமிடையில்
எழுதப்படாத எண்ணற்ற குறிப்புக்கள்
சிதறிக்கிடக்கின்றன

மரணத்தை
நுளம்பின் கூர்முனையிற் கூட உணர முடிகிறது

இன்றென் குற்றவுணர்ச்சியை
உன்னுடன் பகிர்ந்து கொண்டேன்

சாவு
என் அறை முழுவதும் தேங்கிக்கிடக்கிறது
தற்கொலை செய்யத்தான் யாருமில்லை

நான் கூட என்னைக் கொலைசெய்ய அஞ்சுகின்றேன்
அவசரமாக அறையிலிருந்து வெளியேறிய போது
எடுத்து வந்தேன் உன் கவிதைகளின் தொகுப்பை
உன்னைக் கொலை செய்யும் வரிகள் எதிலும்
உன்னைக் கவிஞன் என அச்சிடப்பட்டிருக்கவிலை

கவிதைக்கும் தற்கொலைக்குமிடையில்
ஏதோவொன்று இருந்துகொண்டுதானிருக்கிறது
உன் தற்கொலையையும்
என் தப்பித்தலையும் நியாயப்படுத்த

சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்