சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

வாழ்வை உறிஞ்சி நீளும் கோடை

26 செப்டம்பர், 2013


சித்தாந்தன்-

கடைசியில் கடவுள் சாத்தானுடன்
கைகுலுக்கிக் கொண்டார்.
அங்கவஸ்திரத்தில் படிந்திருந்த புழுதியை
இலாவகமாக உதறிவிட்டார்.
கைகளில் படிந்திருந்த குருதிக் கறையை
அவரால் கழுவ முடியவில்லை.
தன்னைத் துரத்தும் 
ஓலங்களிலிருந்தும் அவரால் மீளமுடியவில்லை.
பிணங்களின் மீதமர்ந்து
விழிகளைப் பிடுங்கும் காகங்களின் மீது
சாபமாய் இரண்டொரு வார்த்தைகளை வீசினார்
அவையும் உதடுகளைக் கூடத் தாண்டவில்லை.
சலிக்கும் வாழ்வை எழுதியெழுதி
வெறுப்புற்றார்.
சாபங்களின் புற்றில்
பாம்புகளுடன் சல்லாபித்து
காலத்தைக் கழிப்பதே விதியென்றான பின்
தகிக்கும் கோடை
வாழ்வை உறிஞ்சி நீள்வதாய் புலம்பினார்.
நிலம் பிளந்து
வேர்கள் இறுகி கிளை விரித்த மரத்தில்
காய்களோ கனிகளோ இருக்கவில்லை
பறவைகள் கூட வந்தமரவில்லை.

00

சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்