சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

கனவில் மீளும் வார்த்தைகள்

07 ஜூலை, 2012


சித்தாந்தன்

சொல்லுதற்கிடையில் தொலைந்து போன
ஏண்ணிறைந்த வார்த்தைகள்
இன்றென் கனவில் வந்தன

பசிய வெயிலின் இளங்குருத்துப் புல்வெளியில்
கிடந்தவாறு
புத்தனின் ஞானக்கண்களால் உலகைக் காண்கையில்
பெருக்கெடுத்த ஞானச் சொற்கள்

கைகளை இரத்தம் தெறிக்க உதறிவிட்டு
நட்பின் முகத்தை கோரமாக்கி விட்டுச் சென்ற
நண்பர்களுக்குச் சொல்ல வைத்திருந்த வார்த்தைகள்

ஏழாம் உலகத்தைப் படித்துவிட்டு
ஜெயமோகனுடன் பகிர சீர்செய்த வார்த்தைகள்

பிள்ளைகள் துயின்ற பின் வீடடைகையில்
வழிமலர்த்தியுறங்கும் அவர்களுக்காய் தெருவில்
கற்பனையாய் உருவாக்கிய கதைககள்

எல்லாமே இன்றென் கனவில்
யுகங்களின் தேக்கத்திலிருந்து பீறிட்ட பெருநதியாக

துயிலை உடைத்து நொருக்கிய
வனாந்தரப் பொழுதுகளின் ஈற்றில்
நானே வார்த்தைகளின் நிசப்தமாய் எஞ்சிவிடுகின்றேன்

பின்னெல்லாம் கனவின் விழி திறந்து
நனைவை அடைகையில்
துாரத்துத் திகிற் பறவையின் குரலில் சிதறுகின்றன
கனவில் மீண்ட வார்த்தைகளும்


சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்