சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

ஒரு பெருங்காடு ஒரு நூறு பட்ஷிகள் காற்று எடுத்துச் செல்லும் ஏதோவொன்று

22 டிசம்பர், 2014


சித்தாந்தன்

நீ என்னை அழைத்துச் செல்கிறாய்
பெருந்தோல்வியின் மையத்துக்கு.
இங்கு காடுகளில்லை
பறவைகளில்லை
சுனைகளில்லை
ஆயினும்
உன் கரங்களில்
மாயமாய் மலர்ந்த தாமரைகளை
என் கரங்களில்
தந்து சொல்கிறாய்
”காலத்தின் சிறுவெளியிடை
துளிர்க்கும் ஒரு வி‘த்துளியில்
எல்லாமும் இருக்கிறது”
நான் உன்னை மறுதலிக்கின்றேன்
விசித்திரமான நட்சத்திரத்தை ரசிக்கும்
தோரணையுடன்
என் மறுதலிப்பு வானத்தில் தொங்குகின்றது.
//
இல்லாத பட்ஷிகளுக்காய்
நான் காத்திருக்கையில்
என் நிழலிலிருந்து சிறகு கிளர்த்தின
ஒரு நூறு பட் ஷிகள்.
யந்திரத்தனத்துடன் உன் உதடுகளில் படர்ந்த
புன்னகையால் நீ என்னை மறுதலிக்கையில்
உன் நிழலில்
உதிர்கின்றது பெருங்காடு.
கூடுகளும் பாதைகளுமற்ற நீள் புதிரில்
என் பறவைகள் அந்தரிக்கின்றன.
//
இடையனின் புலம்பல்கள்
இசையடுக்குகளாய் நீண்டு பெருகுகிறது
இசை சூனியக்காரியின் கோலாக மிதக்கின்றது
யௌவன வெளியில்
மழை இசையின் சாயலுடன் பொளிகிறது.
காடுகள் பீறிடுகின்றன
சுனைகள் பெருகுகின்றன
என் நிழலவழி பெருகிய பட்ஷிகள் கூடு திரும்புகையில்
எண்ணிறைந்த இரவுகளில்
நட்சத்திரங்கள் நடனமிடுவதான பிரமை ஒளிரக் காண்கிறேன்
//
வசந்தத்தின் தெருவில்
வரிசை குலைந்து செல்லும் மந்தைகளின் பின்னே
நீ துள்ளியோடுகின்றாய்
காட்டு மலர்களின் வாசனை கமழ்கிற காற்றில்
நீ மிதக்கிறாய்
இலாவகமான விரலசைவுகளில்
மலைகள் அந்தரத்தில் ஆடுகின்றன.
நீ இத்தருணம்
எதைக் குறித்தாடுகின்றாய்
யுகப்பிளவின்
கடைசிக்கணத்தலா நாங்கள் நிற்கின்றோம்
பேய்மாரி
காலவிளிம்பில் கொட்டுகின்றது
பிசுபிசித்துப் போயிற்று எல்லாம்
//
மிகச்சிறிய காடு
தூறலாய் மழை
சிறகவிழாப் பட்ஷிகள்
நீர் பெருகாக் குட்டைகள்
போதும்
காற்றுக்கென்று நியமங்களிலில்லை
அதை தன்பாட்டில் விட்டுவிடு
அது யுகமுடிவுவரை எடுத்துச் செல்லட்டும்
உனக்கும் எனக்குமிடையிலான ஏதோவொன்றை

00

பரிநிர்வாணம்

25 ஆகஸ்ட், 2014


சித்தாந்தன்

கனவை உடுத்தபடி
இரவிலசையும் நதி
தன் பூர்வீகமான சதுக்கத்தில் தேங்கியபின்
நான் வெளியேறிவிடுகிறேன்.
துக்கங்களிலிருந்து தூக்கங்களுக்கும்
தூக்கங்களிலிருந்து துக்கங்களுக்கும்
தூங்காமையின் அதிரூபமானஅசைவுகள்
உறையும் சாஸ்திரவெளியில்
புணர்ச்சியின் உச்சத்தை உணராதவளின் வலியுடன்
திரும்புகிறாள்
நூறாவதுமுறையும் கைவிடப்பட்டவள்.
காமத்தின் மெல்லிசை மணக்கும் காற்றில்
கைகளாய் அசையும் இலைகளைமென்றபடி
வியர்வைப் பொருக்குலர்ந்த ஆடைகளை
மோகித்திருப்பவன்
இப்போதும் மறுதலிக்கிறான்
புணர்ச்சியின் முனகல்களில்லாத
அத்தனை பொழுதுகளையும்
காமத்துக்கும் வசீகரத்துக்குமிடையில்
நீளும் கோடுகளில்
புத்தனின் ஞானஉணர்ச்சியும்
யசோதரையின் காமஅணுக்கமும் முயங்கும்
கணத்திலொரு பிலாக்கணம்
தீ பற்றி எரிவதைக் கண்டவர்கள்
தங்களின் நிர்வாணங்களை
இல்லாத ஆடைகளால் மூடுகிறார்கள்
கூடுங் கூட்டத்தில்
காமம் மறைத்த சம்பாசணைகள் யாவும்
எரிநட்சத்திரங்களானதை
பின்னொருநாள் கண்டபோது
யசோதரையின் நிர்வாணத்தில்
புத்தர் பரிநிர்வாணமடைந்திருந்தார்.
oOo

சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்