சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

தெய்வங்கள் எறிந்த கத்திகள்

22 ஆகஸ்ட், 2009

சித்தாந்தன்
.......................................................................................

மிகத்தாமதமானது உனதழைப்பு
கண்ணாடிக் குவளைகள் சிதறியுடையவில்லை
சுவரில் மாட்டப்பட்டிருந்த புகைப்படங்களிலிருந்து
எமது விம்பங்கள் இறங்கி நடக்கவில்லை

நீர் வற்றிய நிலத்துப் பூஞ்செடியின்
அகால முகத்தல்
மழையின் ஓவியம் வரையப்பட்டிருக்கிறது

வரிசையாச் செல்லும் எறும்புகளின்
உணர் முனைகளில்
புரியாத மொழியின் அரூப அசைவுகள்


எதன் பொருட்டு
உன் குரல் தாகத்தின் சுனைகளை மூடிவிட்டிருக்கிறது
உன் பிரார்த்தனைக் காலத்தில்
பெயரறியாத் தெய்வங்களும் வீட்டுக்குள் வந்துவிடுகின்றன
எம் படுக்கையிலிருந்தவாறே
வசிய மந்திரங்களை உச்சரிக்கின்றன

அதிதீகளாகவும்
அழையா விருந்தாளிகளாகவும் வரும் தெய்வங்களுக்கு
நீ படையலிட்டுப் பூஜிக்கும் நாட்களில்
சுவரில் மாட்டப்பட்டிருக்கும் எமது புகைப்படத்தில் குத்தி நிற்கின்றன தெய்வங்கள் எறிந்த கத்திகள்

தெய்வங்களின்
புகைப்படங்களுக்குள்ளும் புத்தகங்களுக்குள்ளும் புதையுண்டிருக்கிறது
எமது வாழ்வு பற்றிய இரண்டொரு சொற்களும்

உனதழைப்பு
தெய்வங்களை நோக்கி எனையீர்க்கும்
தந்திரமாய்க் கவிகிறது வீடெங்கும்

சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்