சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

சொற்களுக்குள் ஒளிந்திருக்கும் மரணம்

29 ஜனவரி, 2010

சித்தாந்தன்
.........................................................
ஒரு கத்தியிலோ
உடைந்த கண்ணாடித் துண்டுகளிலோ
சவரம் செய்து வீசிய பிளேட்டுகளிலோ
வெட்டியெறிந்த நகத்துண்டுகளிலோ
எல்லாவற்றிலும்
ஒட்டியிருக்கிறது மரணத்தின் நெடி


துவைத்துக் காயவிட்ட சட்டைப் பையினுள்
நனைந்திருந்த கடதாசித்துண்டில்
எவனோ ஒருவனின்
மரணம் பற்றிய வாக்குமூலம் எழுதப்பட்டிருந்தது

காலையில் புறப்பட்டு
மாலையில் என் பிணத்தை நானே காவியபடி
வீடு திரும்புகிறேன்

எதிர்பாராத யாரோ ஒருவனின் வெறித்த பார்வையில்
நள்ளிரவு நாய்களின் குரைப்பில்
நிச்சயிக்க முடியாத் தருணத்தில்
ஏதோ ஒன்று உடைந்து சிதறுகையில்
உறக்கத்தில் யாரேனும் தட்டி எழுப்புகையில்
பலமுறையும்
நான் கொல்லப்பட்டு விடுகிறேன்

மரணங்கள் அச்சிடப்பட்ட பத்திரிகைகளில்
இரத்தத்தின் மணம் வீசுகிறது

எல்லோருடைய சொற்களுக்குள்ளும்
ஓளிந்துகிடக்கிறது மரணம்
எனது சொற்களில்
எனக்கான மரணம் சொருகப்பட்டிருக்கிறது

இப்போதும்
நான் படித்து மூடிவைத்த
புத்தகத்திலிருந்து
மரணத்தின் மொச்சை அடிக்கிறது

பிணக்காட்டிலிருந்து திரும்பும் அரசன்

10 ஜனவரி, 2010

சித்தாந்தன்
....................................................
தொண்டை கிழியக் கத்தி ஓயந்தவன்
வந்திருக்கிறான் சபைக்கு
சன்னங்களாலான அவன் குரலில்
பிணங்கள் மணக்கின்றன

ஏக தொனியில் கட்டளையிட்டவனின்
முன்னால்
புலன்கள் செத்த மனிதர்கள் முண்டியடிக்கிறார்கள்
சாவுகளால் வனையப்பட்ட
மட்பாண்டத்தின் வாய்வழியாக
நுரைத்தெழுகின்றன கனவுகள்

பிச்சை கேட்பவனின் முகத்தை அணிந்தபடி
வந்திருக்கின்றான் தெருவுக்கு
கபாலங்களாலான மாலையில்
பூக்களைச் சூடியிருக்கிறான்

கனிவைச் சாயமாகத் தடவிய
வாக்குறுதிகள் மரங்களாய் வளர்கின்றன
வாய்பிளந்து காத்திருக்கின்றனர் மனிதர்

கட்டளைகளால் நிரம்பும் அவன் மூளையில்
முளையிடுகின்றன எண்ணற்ற பொய்கள்

அழிவுகளைப் பதட்டமில்லாமல்
பார்த்திருந்த நாட்களுக்கு
தானுருத்துடையவனில்லையெனச் சத்தியம் செய்கிறான்

செவிகள் யாவும்
அவனை நோக்கிக் குவிந்திருக்கின்றன
தோரணங்கள் தொங்கும் வீதிகளில்
கபாலத்தைத் தொலைத்த மனிதருக்காக
கொட்டுகிறான் புன்னகைகளை

தோற்றுப்போன மனிதர்களின் முன்னிருக்கும்
மட்பாண்டத்தில்
நோதித்து நாறுகின்றன
பழக்கப்பட்ட வாக்குறுதிகள்

சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்