சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

போதையுலராப் பொழுதின் ஜந்துகள்

21 ஜனவரி, 2011

( சுருக்கக் குறிப்பு-1)

சித்தாந்தன்

தன் துக்கத்தை மலைகளுக்குப் பரிசளி;த்தவனின்
நிழலில் பதுங்குகிறது வரியடர்ந்த மிருகம்
காடுகள் விழித்துக் கொண்ட பிறகு
நகரங்களின் மூலைமுடுக்குகளெல்லாம் பதுங்கித் திரிந்து
களைத்து திரும்பியிருக்கிறது இவனிடம்

தன் சொற்களுக்குள் அதை ஒளித்து வைத்திருக்குமிவன்
துயில் மறந்த நோயால் அவஸ்தையுற்றான்
அவனின் புத்தக் கட்டுகளுக்குளிலிருந்து அது உறுமும்
பொழுதுகளில்
சாபத்தைத் தன் தலையில் தாங்கித் திரிபவனைப் போலாய்
நள்ளிரவுகளில் வீதியிலிறங்கி ஓடினான்

நிதானித்த ஒரு பகற்பொழுதில்
இவனுக்கும் அதற்குமிடையில் ஒப்பந்தம் கச்சாத்தானது
அதன் படி
இவன் தன் புத்தகக் கட்டுகளை விரித்து பெருங்காட்டை
வரைந்து குகைகளுக்குள் பதுங்கலானான்
அது தன் குரலைச் சுருக்கி அடி வயிற்றில் புதைத்து கொண்டது

அற்குப்பிறகு
இவனுக்கும் அதுக்குமிடையில் பேதங்களை யுணரமுடியவில்லை
அது தன்னைப் போலிருப்பதாக இவனும்
இவன் தன்னைப் போலிருப்பதாக அதுவும்
குற்றஞ்சாட்டத் தொடங்கின

முடிவில் ஒருநாள்
நகரத்தின் சந்தொன்றில் இகரசியமாக சந்தித்துக் கொண்டபோது
ஒன்றையொன்று குரோதத்துடன் கடித்துக் குதறின

இவனின் இரத்தைத்தைக் கண்டு அதுவும்
அதன் இரத்தைத்தைக் கண்டு இவனும் கதறத்தொடங்கினர்

இவனின் உடல் முழுதும் தழும்புகளாய் படந்தன
அதன் வரிகள்
அதன் குரலில் படிந்து போனது இவனது சொற்கள்

இப்போது இரண்டும் சேர்ந்து பெருங்காட்டை உருவாக்குகின்றன
தாம் வாழ்வதற்கு

18.08.2010

நன்றி- எதிர்

சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்