சிறுகதை

சிறுகதை
அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு.

புத்தக அறிமுகம்

புத்தக அறிமுகம்
‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’

குறும்படம்

குறும்படம்
அவசரக்காரர்களின் குறும்படம்

விமர்சனம்

விமர்சனம்
ஏழாம் அறிவு- கருணாகரன்
$சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்றாண்டுகளாகிவிட்டன.அவரின் நினைவுகளைத் "தருணம்" பதிவு செய்கின்றது $ மறுபாதி-இதழ் 6 (வைகாசி-ஆவணி/2011) வெளிவந்துவிட்டது. தொடர்புகளுக்கு-siththanthan@gmail.com-தொலைபேசி-0094213008806-எனது ”துரத்தும் நிழல்களின் யுகம்” என்னும் கவிதைத் தொகுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது$

பாறைகளுக்கடியில் விழித்திருப்பவனின் இரவு

13 மே, 2008

சித்தாந்தன்

---------------------------------------------------------------
இந்த இரவு
பிணமாய் விறைத்துக் கிடக்கிறது
காற்று உருகி இலைகளில் வழிகிறது
மழை இருளிலேறித் தாண்டவமாடுகிறது
உறங்கும் தீக்குச்சியை உரச மூண்ட தீ
பெருங்காடாய் எரிகிறது

திசைகளின் முரண்களிலிருந்து
ஈனத்தில் பிறப்பெடுக்கும் வனமிருகங்களின்
ஒழுங்கற்ற ஒலிக்குறிகளை
வாசித்தபடி புணரத்தொடங்கினோம்
ரூபங்களின் இணைவில்
பொங்கிய பாலிமையின் உச்சத்திலிருந்து
வடிந்து வற்றத்தொடங்கியது பசி

நீயற்ற வெளி என்மீது கவிகையில்
எம் அந்தரங்கங்களில்
இதழுதிர்ந்த காதல் சருகின் படபடப்பு

மழை தாண்டவமாடுகிறது
இரகசியக் கால்வாய்களில் பெருகும் வெள்ளம்
பாறைகளை இழுத்துச் சுழிக்கிறது
எம் படுக்கையின் கீழ் கடல்
நீ உன் கடலில் இறங்கி நடக்கலானாய்
நான் என் கடலில் இறங்கி நடக்கத்தொடங்கினேன்
வெறும் படுக்கைதான்
தெப்பமாக மிதந்துகொண்டிருக்கிறது
----------------------------------------------------------------------------

சிறுகதைகள்

விமர்சனங்கள்

தமருகம்

வலைப்பதிவுக் காப்பகம்

காலத்தின் புன்னகை

காலத்தின் புன்னகை

சிதறுண்ட காலக் கடிகாரம்

சிதறுண்ட காலக் கடிகாரம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு

புதுமெய்க் கவிதைகள்

புதுமெய்க் கவிதைகள்
தா.இராமலிங்கம் கவிதைகள்