அம்ருதா வரைந்த சிங்கங்களின் புனைவுருக்கள்
In கவிதைகள்13 ஜூலை, 2010
சித்தாந்தன்
நீளமான இரவின் மையத்தில் தலை நீட்டிப்
படுத்திருக்கும் சிங்கங்களைத்
தன் பாலியப் பருவத்திலிருந்து
அம்ருதா வரைந்திருக்கிறாள்
அம்ருதா தன் சிங்கங்களிற்கு
குறிகளை வரைவதில்லை
முன்பனிக் காலத்தில் அவள் வரைந்த
எண்ணற்ற சிங்கங்களும்
புணர்ச்சியைக் கண்டு முகம் சுழிப்பவை
அவளின் நூறாவது சிங்கம்
குறியை வரையக் கேட்டு அடம்பிடித்தபோது
இருநூறாவது தடவை வரைவதற்கிடையில்
குறியை வரையும் நுட்பங்களைக்
கற்று முடிப்பதாகக் கூறினாள்
அம்ருதாவின் வனத்தில்
சிங்கங்களின் கர்ச்சனைகளில்லை
வனத்தின் புதிரும் அடர்வதில்லை
வனங்களைப் புறக்கணிக்கும் சிங்கங்கள்
அவளுக்கு நண்பர்களாயுள்ளன
தன் சூட்சும புத்தியால்
சிங்கங்களின் நகங்களை வெட்டிவிடுகிறாள்
பற்களை பிடுங்கிவிடுகிறாள்
அவள் வனங்களை விட்டு வெளியேறிய
சிங்கங்களின் இராணியாகத் தன்னைப்
பிரகடனப்படுத்தியபடியிருக்கிறாள்
விழிமுட்டும் தூக்கத்தை
அநேகமும் தூங்கியே கழிக்குமவள்
தான் சிங்கங்களை வரைந்த வரைவேட்டை
தலையணைக்கடியில் பத்திரப்படுத்தியிருக்கிறாள்
அம்ருதாவின்
மிருதுவான மூச்சொலியில் தம் பொழுதுகளைத்
தூங்கிக் கழிக்கின்றன சிங்கங்கள்
Related Posts:
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அஞ்சலி
சிறுகதைகள்
விமர்சனங்கள்
தமருகம்
இணைப்புக்கள்
- ஃபஹீமாஜஹான்
- அ.முத்துலிங்கம்
- அகேனம்
- அஜந்தகுமார்
- அருண்மொழிவர்மன்
- எஸ்.ராமகிருஷ்ணன்
- எஸ்போஸ்
- கடற்கரய்
- கருணாகரன்
- கலாப்ப்ரியா
- குட்டி ரேவதி
- சஜிதரன்
- சுதேசம்
- ஜமாலன்
- ஜெயமோகன்
- டிசே தமிழன்
- தானா விஷ்ணு
- தீபம்
- துவாரகன்
- தேவ அபிரா
- நாகார்ஜூனா
- நாஞ்சில்நாடன்
- பெட்டை
- முரண்வெளி
- மெலிஞ்சி முத்தன்
- லீனா மணிமேகலை
- வண்ணதாசன்
- வண்ணநிலவன்
- ஷோபாசக்தி
- ஸ்மைல் வித்தியா
பகுதிகள்
- அறிமுகவுரை (1)
- எதிர்வினை (2)
- கட்டுரை (2)
- கடிதம் (1)
- கவிதைகள் (81)
- குறும்படம் (1)
- சஞ்சிகை அறிமுகம் (2)
- சிறுகதை (4)
- சினிமா (2)
- நினைவுக் குறிப்பு (1)
- நுால் அறிமுகம் (2)
- நேர்காணல்கள் (1)
- நேரும் எதிரும் (2)
- மாயத்திரை (3)
- முன்னுரைகள் (2)
- மொழியாக்கக் கவிதைகள் (2)
- விமர்சனங்கள் (3)
0 comments:
கருத்துரையிடுக