சித்தாந்தன்
----------------------------------------------------------
வலி மிகு இரவுகளை
என் தோழில் சுமந்துகொண்டிருக்கிறேன்
ஆணிகளறையப்பட்;ட இதயத்திலிருந்துவழியும்
பச்சை இரத்தத்தின் வெம்மை
காலக்கிண்ணத்தை சாம்பலால் நிறைக்கிறது
இரவைப்போல படியும் பனிப்புகாரை
விலக்கிக்கொண்டு கூச்சலிட முடியாத
கணங்களின் மேல் முள்வலையாய் மூடுகிறது
அச்சத்தின் கருநிழல்
எல்லாம் நடந்துகொண்டிருக்கின்றன
ஒரு பயணியின் கைப்பிடிக்குள்ளிருந்து
வழிகின்றன கனவுகள்
மிதமிஞ்சியதான அகோரத்துடன்
வனங்களின் உட்பாதைகளில் மரணங்கள்
காற்றின் இயல்பாய் நடந்;தேறுகின்றன
கம்பிகள் அடித்திறுக்கப்பட்ட சிறைகளுக்குள்ளிருந்து
உயிர் கருகும் நெடி
கையாலாகாதவனின் கண்ணீர் வீழ்ந்து
சமுத்திரங்களில் மூழ்கிறது தீ
மூடுண்ட நகரத்தின் சாட்சியாய் சுவர்களில்
மோதிச்சிதறுகிறது வெளவால்களின் குரல்
இரட்சிப்பின் வார்த்தைகளில் ஈரமுலர்ந்த பின்னும்
சிறைக்கதவை உதைத்து
முகத்தில் எச்சில் உமிழ்பவனிடமிருந்து
இன்னும்
கருணை வேண்டிக்காத்திருக்கிறது மனசு
10.03.2008 இரவு 11.55
------------------------------------------------
Related Posts:
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அஞ்சலி
சிறுகதைகள்
விமர்சனங்கள்
தமருகம்
இணைப்புக்கள்
- ஃபஹீமாஜஹான்
- அ.முத்துலிங்கம்
- அகேனம்
- அஜந்தகுமார்
- அருண்மொழிவர்மன்
- எஸ்.ராமகிருஷ்ணன்
- எஸ்போஸ்
- கடற்கரய்
- கருணாகரன்
- கலாப்ப்ரியா
- குட்டி ரேவதி
- சஜிதரன்
- சுதேசம்
- ஜமாலன்
- ஜெயமோகன்
- டிசே தமிழன்
- தானா விஷ்ணு
- தீபம்
- துவாரகன்
- தேவ அபிரா
- நாகார்ஜூனா
- நாஞ்சில்நாடன்
- பெட்டை
- முரண்வெளி
- மெலிஞ்சி முத்தன்
- லீனா மணிமேகலை
- வண்ணதாசன்
- வண்ணநிலவன்
- ஷோபாசக்தி
- ஸ்மைல் வித்தியா
பகுதிகள்
- அறிமுகவுரை (1)
- எதிர்வினை (2)
- கட்டுரை (2)
- கடிதம் (1)
- கவிதைகள் (81)
- குறும்படம் (1)
- சஞ்சிகை அறிமுகம் (2)
- சிறுகதை (4)
- சினிமா (2)
- நினைவுக் குறிப்பு (1)
- நுால் அறிமுகம் (2)
- நேர்காணல்கள் (1)
- நேரும் எதிரும் (2)
- மாயத்திரை (3)
- முன்னுரைகள் (2)
- மொழியாக்கக் கவிதைகள் (2)
- விமர்சனங்கள் (3)
வலைப்பதிவுக் காப்பகம்
-
►
2011
(19)
- ► செப்டம்பர் (2)
-
►
2010
(22)
- ► செப்டம்பர் (1)
-
►
2009
(12)
- ► செப்டம்பர் (3)
-
▼
2008
(29)
- ► செப்டம்பர் (2)
-
▼
ஜூன்
(10)
- பிடாரனின் திகைப்பூட்டும் கனவுகளிலிருந்து நான் தப்ப...
- நகரத்திற்கு வந்தவனின் இரண்டு கவிதைகள்
- மகா ஜனங்களின் அழுகை அல்லது அரசர்களின் காலம்
- உரையாடலில் தவறிய சொற்கள்
- எரிதலின் வலி
- தருணம்/2
- கருணை வேண்டிக் காத்திருத்தல்
- தருணம்/1
- காற்றில் இசைப்பவனின் கனவு இசை
- சந்திரபோஸ் சுதாகர் எரிந்து கொண்டிருக்கும் காலத்தின...
0 comments:
கருத்துரையிடுக